எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : புதிய வரி முறையில் தனிநபர் ஒருவரின் ஆண்டு மொத்த வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை என்றும், பழைய வரி முறையை பின்பற்றுவோருக்கான தனிநபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்துப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடைசி பட்ஜெட்...
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும்.
ரூ.50 ஆயிரம் உயர்வு...
பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
பழைய வரிமுறையை பின்பற்றுபவர்கள்:
1) ரூ.3 லட்சம் வரை - வருமான வரி இல்லை.
2) ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - 5 சதவீதம் வரி.
3) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீதம் வரி.
4) ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீதம் வரி.
5) ரூ.15 லட்சத்திற்கும் அதிகம் - 30 சதவீதம் வரி.
புதிய வரி முறையை பின்பற்றுபவர்கள்:
புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லாபகரமாக இல்லை...
தற்போது, நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தெரிகிறது. இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-யின் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது. புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual gross salary) மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது லாபகரமாக இல்லை என்ற கருத்தும் உள்ளது.
மேலும் அதிகரிப்பு...
புதிய வருமான வரி முறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ரூ.5 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வரம்புதான் தற்போது உயர்த்தபட்டுள்ளது. இனி ரூ.7 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.
வரி உயர்த்தப்பட்டவை:
1) சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
2) தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
3) தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு.
3) சமையலறை சிம்னி சுங்க வரி 15 சதவீதம் அதிகரிப்பு.
4) ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக அறிவிப்பு.
5) இறக்குமதி செய்யப்பட்ட கார், எலெக்ட்ரிக் வாகனங்கள்.
6) மின்சார சமையலறை புகைபோக்கி.
7) இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள், பொம்மைகள்.
வரி குறைக்கப்பட்டவை :
1) டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைப்பு.
2) செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு.
3) ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைப்பு.
4) இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
5) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்.
6) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்.
7) லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
1) 2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2) கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.
3) நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4) தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும்.
5) லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும்.
5) நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷ்னல் மையங்கள் உருவாக்கப்படும்.
6) அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
6) மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.
7) ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.
9) ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.
10) 2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
11) பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
12) நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
13) வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
14) நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.
15) உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
16) நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
17) போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
18) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு.
19) பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.
20) கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
21) பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
22) விவசாய கடன் இலக்குத் தொகை ரூ.20 லட்சம் கோடி
23) பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் : தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
14 May 2025புதுடெல்லி : ஆகமம் அல்லாத கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆகமக் கோவில்கள் மற்றும் ஆகமம் இல
-
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. களத்தில் முதன்மையாக நிற்கும் : விஜய் அறிக்கை
14 May 2025சென்னை : சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் என்று அதன் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
471 கோடி ரூபாயில் அமைகிறது சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
14 May 2025சென்னை : சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக