எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.17 - நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அறிவிப்பு விவரம் வருமாறு:-
நகர் ஊரமைப்புத் துறையின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
புராதன இடங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளைச் சீரழிவிலிருந்து பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 39 நகரங்களும் ஊரக வளர்ச்சித் துறையால் 10 நகரங்களும் புராதன நகரங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகர ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 5 புராதன நகரங்களுக்குத் தலா ரூ.1 கோடி வரை மானியமாக வழங்கப்படும்.
நகரங்களின் அளவு பெருகி வருவதும் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதும் அதிக அளவிலான போக்குவரத்துத் தேவைகளையும், சாலைகளில் நெரிசலையும் உருவாக்கியுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்ய போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 9 நகராட்சிகளுக்கு தலா ரூ.50 லட்சம் வரையிலும, 1 மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வரையிலும் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும்.
பொதுமக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், அசதி ஏற்படுத்தும் பரபரப்பான அலுவல்களுக்கிடையில் சிறிது நேரம் இளைப்பாறவும் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக பூங்காக்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 பூங்காக்களை மேம்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்படாத வீடுகள் மற்றும் வீட்டுமனைகளைக் கண்டறிவும், கள ஆய்வு மேற்கொள்ளவும், சட்ட நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், இதன் மூலம் திட்டக்குழு மங்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும் வாகன வசதி மிகவும் அவசியமாகிறது. மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய உள்ளூர்த்திட்டக் குழுமங்களுக்கும் மொத்தம் 6 வாகனங்கள் வழங்கப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சி விதிமுறையில், ஒவ்வொரு கட்டத்திலும் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு செயல்முறைகளை வலுவானதாகவும், சீரானதாகவும் ஆக்க விரிவான தணிக்கை முறை தேவைப்படுகிறது.
முன்னோடியாக உள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு பற்றிய தணிக்கை மேற்கொள்ளப்படும்.
பரந்த குடியிருப்புகளில் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்த வெளியிடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கலந்தாலோசித்து விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணைதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நில உபயோகத் தகவல் தொகுப்பு (கஹடூக்ஷ மஙூடீ ஐடூக்ச்ஙுஙிஹசிடுச்டூ நநீஙூசிடீஙி) உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
சென்னை பெருநகர் பகுதியில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முறைகள் சிறப்பாக அமைந்துள்ளன. பெருகிவரும் தனியார் போக்குவரத்து வாகனங்களால் சாலைகளில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை மக்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பு செய்வது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொள்ளும்.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 63 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மீட்டர் நிலப்பகுதியின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
17 Jul 2025வாஷிங்டன், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பரபரப்பு தகவல்
17 Jul 2025சென்னை, ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.