எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும், வீரர்கள் கைது நடவடிக்கைகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா உள்பட 16 வீரர்கள் சிக்கினர். அதே நேரத்தில் சென்னையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை முடிக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் கைதான தரகர் கொடுத்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (54) கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவதாக அவரிடம் போலீசார் நைசாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதை நம்பிய லட்சுமணன் சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிரடியாக லட்சுமணன் வீட்டுக்கு போலீசார் புகுந்து அவரை கைது செய்தனர். அப்போது லட்சுமணனின் லேப்டாப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன் அணியும் மோதிய ஆட்டம் ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமணனிடம் இருந்த லேப்டாப் ரூ.5 லட்சத்து 5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்து சென்று விசாரித்ததில். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(51), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அக்பர்(51) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம், லேப்டாப், 7 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரத்தில் லட்சுமணன் தான் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். அவருக்கு சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களிடம் தொடர்பு உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பாலசுப்பிரமணியம், அக்பர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
சூதாட்டம் மூலம் கோவையில் வசூலான பணத்தை லட்சுமணன் நெட்பேங்கிங் வழியாக சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள தரகர்களுக்கு அனுப்பியுள்ளார். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பலரது எண்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே சூதாட்டத்தில் ஈடுபட்டதும். அதில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்கள், கிளப்புகளுக்கு செல்பவர்கள் தான் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் கைதான இவர்களின் கீழ் இன்னும் ஏராளமான கீழ் மட்ட தரகர்களும் இருந்துள்ளனர். லட்சுமணன் கைதானதை தொடர்ந்து அனைவரும் தமது செல்போன்களை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலை விரித்து தேடி வருகிறார்கள்.
தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தும் சூதாட்ட பணத்தை வெளிமாநில தரகர்களுக்கு அனுப்பியது எப்படி என்பது குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பூரை சேர்ந்த 2 தரகர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சில பனியன் அதிபர்களும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் தலைமறைவாகிவிடக்கூடும் என்பதால் கைதானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதான லட்சுமணன் 2000ம் ஆண்டு முதலே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நடந்துள்ள சூதாட்டம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.1லட்சும் வரை நடந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டுபவர்கள் பெட்டிங்கில் வெற்றி பெற்றால் ரூ.20 ஆயிரமும் ரூ.1லட்சம் கட்டுபவர்களுக்கு ரூ.2லட்சமும் என எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அவர்களுக்கு அப்படியே இரட்டிப்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்ட சம்பவம் கோவை, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


