எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மே.23 - மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதன் மூலம் கடைசியாக நடைபெற்ற நான்கு ஐபிஎல் போட்டிகளிலும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றது. ஒட்டுமொத்தமாக, 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் இரு முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 18.9 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மும்பை அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அணியில் வேயன் ஸ்மித், மிச்சல் ஜான்சன், முனப்படேல், பிரக்யான், ஓஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அதே சமயம் சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.
ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக ஆரம்பித்தார் சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸி. இதைத் தொடர்ந்து மேக் ஹஸியும், முரளி விஜயும், அதிரடியாக விளையாடினர்.அணியின் ஸ்கோர் 52 ஆக உயர்ந்தபோது, 23 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி மும்பை வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் சேர்த்தது. குறிப்பாக மைக் ஹஸி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர், மளமளவென உயர்ந்தது. மறுபுறம் அதிரடி ஆட்டத்தினால் ரெய்னா 23
பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகம் காட்டிய ரெய்னா, பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தார். இதனால் 16.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 150 ஐ கடந்தது. இறுதி வரை மும்பை வீரர்களால் 2-வது விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சுரேஷ் ரெய்னா, 42 பந்துகளில் 82 ரன்கள், 95 (சிக்ஸர், 5 பவுண்டரி) ஹசி 58 பந்துகளில் 86ரன்கள் எடுத்தனர். மும்பை அணித் தரப்பில் போலார்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
193 ரன்களை இலக்காக கொண்டு கள மிறங்கிய மும்பை அணியில் வேயன் ஸ்மித்தும், ஆதித்யா தாரேயும், களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 12 ஆக உயந்தபோது, 7 ரன்கள் எடுத்திருந்த தாரே,மோர்கல், பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இதனிடையே சிறிது நேரம் மெதுவாக ஆடிய ஸ்மித்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியால் ரசிகர்கள் குதுகலம் அடைந்தனர். அவர் 21 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகமாக விளையாடிய அவர் 68 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்கு வீச்சில் ஆட்டமிழந்தார்.
28 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசினார். ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு மும்பை அணி வீரர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர்.போலார்ட் மட்டும் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 18 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும், இழந்து மும்பை தோற்றது.இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிச் சுற்றில் அடி எடுத்து வைத்தது சூப்பர் கிங்ஸ். எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் மும்பை அணி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் கிங்ஸ் தரப்பில் பிராவோ, ஜடேஜா, ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொகித் சர்மா 2 விக்கெட்டையும் மோர்கல், மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்த சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர் மைக் ஹஸி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹஸி 86 ரன்கள் எடுத்தார். இதனால் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ஆல் ரவுண்டர் பிராவோவும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இந்த ஐபிஎல் ஆட்டத்தில் 28 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள், அதிக ரன்கள் என இரண்டிலுமே சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற