எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விஜயநகரம் : ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை கிழக்கு கடற்கரை ரயில்வே உறுதி செய்துள்ளது. இந்நிலையில், விபத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு ரயில்களிலுமே ’கவச்’ பாதுகாப்பு அமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், விபத்தில் காயமடைந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயநகர் அரசுப் பொது மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் விபத்துப் பகுதிக்குத்தான் செல்வதாக இருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் ரயில்வே பாதையை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் தான் அங்கு செல்வதால் வேலை தடைபடலாம் எனக் கருதி அவர் மருத்துவமனைக்குச் சென்றதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனுக்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனிமூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும். இந்நிலையில், ஆந்திராவில் விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் மிக மோசமான ரயில் விபத்து நடந்தது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட் விபத்தில் 260-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவச்’ என்ற தொழில்நுட்பம் இல்லை என்ற தகவல் வெளியாகி சர்ச்சையானது. அப்போதே பல தரப்பிலிருந்தும் ரயில்வேயில் கவச் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது பற்றி கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலுமே கவச் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்து பற்றி விவரம் அறிய கண்டகப்பள்ளி (8978081960), விஜயநகரம் ( 08922-221206, 08922-221202, 9493589157), ஸ்ரீகாகுளம் சாலை (08942-286213, 286245) என மூன்று இடங்களில் உதவி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் பலாசா ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் விபத்து நடந்த சில நிமிடங்களில் கண்டகப்பள்ளி, அலமண்டா, கோத்தவாசலா பகுதிகளில் இருந்து பொது மக்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதலில் அவர்கள் ரயில் தடம் புரண்டதாக மட்டுமே நினைத்து வந்துள்ளனர். ஆனால், விபத்தின் தீவிரத்தைப் பார்த்த பின்னர் அப்பகுதி வாசிகள் தண்ணீர், பால், உணவுப் பொட்டலங்கள் எனத் தங்களால் இயன்றதை எடுத்துக் கொண்டு விபத்துப் பகுதிக்கு வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சிலர் தங்களின் செல்போன்களைக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் சொல்ல உதவியுள்ளனர். அதேபோல் மீட்புப் பணிகளிலும் உள்ளூர்வாசிகள் உதவியதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
அந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன்: ஹர்பஜன்
21 Jul 2025மும்பை : ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை: பார்லி.யில் அமைச்சர் தகவல்
21 Jul 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி எதிரொலி: பார்லி. இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தல்
21 Jul 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்
-
கீழடி அறிக்கை நிராகரிப்பா? பாராளுமன்றத்தில் விளக்கம்
21 Jul 2025டெல்லி, மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து தி.மு.க. எம்.பி.
-
இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைக்க உள்ள ஜஸ்பிரித் பும்ரா
21 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைக்க உள்ளார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
21 Jul 2025மதுரை : விளையாட்டு போட்டிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
வங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரம்: பள்ளியில் விமானம் விழுந்து 19 பேர் பலி
21 Jul 2025டாக்கா, வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
-
ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
21 Jul 2025முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.