எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார். 37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது. 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
_______________________________________
இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ்
ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. 'பாஸ்பால்' என்ற அதிரடியான பேட்டிங் அணுகுமுறைக்கு பிறகு இங்கிலாந்து சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி பெற்ற மோசமான தோல்வி இதுதான். இந்த தோல்வி அவர்களின் 'பாஸ்பால்' யுக்தியின் விளைவை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக விளையாட முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடியாக விளையாடலாம். 'பாஸ்பால்' என்பது தாக்குதல் ஆட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. ஆனால் இங்கு நெருக்கடியை திறம்பட கையாள்வதும் முக்கியம்.
3-வது நாளில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் விளையாடிய விதத்தை பாருங்கள். 30 அல்லது 40 பந்துகள் எதிர்கொண்டு அழுத்தத்தை தணித்ததும் பந்தை பவுண்டரிக்கு விளாச ஆரம்பித்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட். இந்தியா மொத்தம் 228.5 ஓவர்களில் 875 ரன்கள் குவித்தது. இங்கு இந்தியாவின் பேட்டிங் சலிப்பை ஏற்படுத்தியது என்று யாரும் சொல்லமாட்டார்கள். இந்திய மண்ணில் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் ஆலோசிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்த விதம், குறிப்பாக ஜோ ரூட் தவறான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்தபோது எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை' என்றார்.
_______________________________________
ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா (24) தகுதி பெற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “ஒலிம்பிக்கில் விளையாடுவது என் வாழ்நாள் கனவாக இருந்தது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இறுதி ஒத்திகை பயிற்சியில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை பொருத்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இத்திய குதிரையேற்ற அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலந்து, நெதர்லாந்து, ஜெர்மணி மற்றும் பெல்ஜியமில் ஒத்திகை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை, பெற்றதன் பேரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
_______________________________________
டி20 தொடரில் நேபாள அணி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நேபாள அணி இந்தியாவின் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. 'நட்புக் கோப்பை' என அழைக்கப்படும் இந்த தொடர் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ