எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.1 - இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பாசறையை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறஇத்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் சேலம் போஸ்மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர பாசறை செயலாளர் டாக்டர் கே.எஸ்.சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.பாசறை நிர்வாகிகள் கே.சுரேஷ்,டி.கோபிநாத்,ஜி.கீதா,வி.பெரியசாமி,வி.பாலு,ஜி.ஆண்டாள்,மற்றும் எம்.வெங்கடாஜலம்,ஏ.சத்யா,பி.டி.தணிகைவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளவும்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.,மேயர் எஸ்.சவுண்டப்பன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஜி.வெங்கடாஜலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தலைமை வகித்து பேசிய பாசறை மாநில செயலாளரும்,பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது.இங்கு பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,செம்மலை எம்.பி.ஆகியோர் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த போது அதிமுகவில் இதுபோன்ற அமைப்புகள் இல்லை. இருப்பினும் நாங்கள் இயக்கத்திற்காக உழைத்தோம் என்றார்கள். உண்மைதான் நமக்குதான் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.கடந்த சட்டமன்ற தேர்தலிலே பாசறை நிர்வாகிகள் பலருக்கு முதல்வர் தேர்தலில் போட்டியி வாய்ப்பளித்துள்ளார்.பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளார்.ஆசியாவிலேயே இந்தியாவை வழி நடத்தக்கூடிய சிறப்பான தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என பிற நாட்டி வாழ்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி தந்துள்ளார். தமிழகத்தில் பாசறை நிர்வாகிகள் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தெரு,தெருவாக,வீடு,வீடாக சென்று தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.எஸ்.எம்.எஸ்.மூலம் முதல்வரின் சாதனைகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு பாசறை உறுப்பினர் 3 புதிய உறுப்பினர்களை அழைத்துவர வேண்டும். அப்படி அழைத்து வந்தால் 3 பிளஸ் 1 கூட்டல் 4 என 2 கோடி பேர் அதில் மட்டுமே இருப்பார்கள் அப்படி இருந்தால் தமிழக முதல்வரின் பலம் டெல்லிக்கு கேட்கும். இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் பாசறை நிர்வாகிகள் அவர் கூறியுள்ள 3 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும். 1 முதலில் மாநகரில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை 90 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்.2 பாசறையில் செயல்படாத நிர்வாகிகள் அல்லது நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருந்தாலோ அவர்களை எடுத்துவிட்டு துடிப்போடு செயல்படும் பாசறை உறுப்பினர்களை மாநகர செயலாளர் மற்றும் அமைச்சர் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து 15 நாட்களுக்குள் முதல்வரின் கவனத்திற்கு பட்டியல் அனுப்ப வேண்டும்.3 அதிமுகவின் சாதனைகளை வீடு,வீடாக சென்று எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 அல்ல 2 அல்ல ஓராயிரம் சாதனைகளை செய்துள்ளார். அதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவிடம் பத்திரிக்கை நிருபர்கள் உங்கள் வெற்றிக்கு என்ன? காரணம் என்று கேட்டபோது அவர் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சில திட்டங்களை செயல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்றார். இதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வரின் ஒப்பற்ற திட்டமான லேப்-டாப் திட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்று சொல்லியுள்ளார்.இப்படி மற்றவர்கள் நமது திட்டத்தை எடுத்து வெற்றி பெறும் அளவிற்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 6 பேர் பிரதமர் வேட்பாளர்களாக வட இந்திய பத்திரிக்கைகள் பட்டியலிட்டுள்ளன.1 நரேந்திரமோடி, 2 சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் யாதவ், 3 பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 4 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி,6 தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் நிறை குறைகளையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.மோடிக்கு மக்கள் செல்வாக்கு குஜராத்தில் இருந்தாலும் அவர் மதச்சாயம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.2 நிதிஷ்குமார் வட இந்தியாவில் அறிமுகமானவர் ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு எந்த அறிமுகமும் இல்லை. 3 மாயாவதி காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கூட எதிர்க்க திராணியில்லாதவர்.4 மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் கம்யூனிஸ்டுகளை சமாளிக்க முடியாமல் பல குழப்பங்களை உண்டு பண்ணியுள்ளார். நம்பகதன்மை இல்லாதவர்.5 முலாயம் சிங் யாதவ் கட்சியோ வன்முறை கட்சி என்ற முத்திரை உள்ளது. 6 வதுதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.இந்தியாவிற்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்று யாரும் இல்லை. அவர் தொண்டுள்ளமும்,துறவறமும் கொண்டவர் எனவே அவர் இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ளவர் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசறை நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஏனென்றால் வெற்றியை தீர்மானப்பவர்கள் nullநிங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே வெற்றியை தீர்மானத்து போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,மாதேஷ்வரன்,ஜெயப்பிரகாஷ்,சண்முகம், கழக பாசறை இணை செயலாளர்கள் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ.,ஆர்.முத்துசாமி,பாசறை துணைச் செயலாளர்கள் பி.ஆர்.மனோகர்,ஜி.பழனிவேல், சி.எம்.விஷ்ணு பிரபு, தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.இரவீந்திரநாத்குமார், புதுகோட்டை பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன்,தர்மபுரி மாவட்ட பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன்,ஆர்.ஆர்.சேகரன், அவைத் தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,எம்.துரைராஜ்,எஸ்.கீதா,இணைச் செயலாளர் டிப்போ ராஜம்மாள், துணை செயலாளர் வி.பன்னீர் செல்வம், மேற்கு தொகுதி செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் சின்னதிருப்பதி ஆறுமுகம்,மேற்கு தொகுதி இணைச் செயலாளர் ஆர்.ராம்ராஜ்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாணவரணி செயலாளர் சக்திவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,
இலக்கிய அணி செயலாளர் உரைமுரசு யூசப், அம்மாபேட்டை பகுதி பேரவை செயலாளர் யாதவமூர்த்தி,முன்னாள் மாநகர செயலாளர் பாலகிருஷ்ணன்,கவுன்சிலர்கள் மார்க்கபந்து,புல்லட் ராஜேந்திரன்,கீதா அன்பழகன்,பாமா கண்ணன்,வட்டபாக செயலாளர்கள் மயில் வெங்கடேசன், ஓம் குமார், சூரமங்கலம் பகுதி பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அம்மாபேட்டை பகுதி பாசறை துணை செயலாளர் கே.டி.ராமச்சந்திரன்,சூரமங்கலம் பகுதி பாசறை எம்.சிவானந்த், கொண்டலாம்பட்டி பாசறை துணை செயலாளர் தங்கதாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாசறை பொருளாளர் என்.தினேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.