எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.1 - இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பாசறையை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறஇத்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் சேலம் போஸ்மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர பாசறை செயலாளர் டாக்டர் கே.எஸ்.சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.பாசறை நிர்வாகிகள் கே.சுரேஷ்,டி.கோபிநாத்,ஜி.கீதா,வி.பெரியசாமி,வி.பாலு,ஜி.ஆண்டாள்,மற்றும் எம்.வெங்கடாஜலம்,ஏ.சத்யா,பி.டி.தணிகைவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளவும்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.,மேயர் எஸ்.சவுண்டப்பன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஜி.வெங்கடாஜலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தலைமை வகித்து பேசிய பாசறை மாநில செயலாளரும்,பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது.இங்கு பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,செம்மலை எம்.பி.ஆகியோர் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த போது அதிமுகவில் இதுபோன்ற அமைப்புகள் இல்லை. இருப்பினும் நாங்கள் இயக்கத்திற்காக உழைத்தோம் என்றார்கள். உண்மைதான் நமக்குதான் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.கடந்த சட்டமன்ற தேர்தலிலே பாசறை நிர்வாகிகள் பலருக்கு முதல்வர் தேர்தலில் போட்டியி வாய்ப்பளித்துள்ளார்.பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளார்.ஆசியாவிலேயே இந்தியாவை வழி நடத்தக்கூடிய சிறப்பான தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என பிற நாட்டி வாழ்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி தந்துள்ளார். தமிழகத்தில் பாசறை நிர்வாகிகள் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தெரு,தெருவாக,வீடு,வீடாக சென்று தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.எஸ்.எம்.எஸ்.மூலம் முதல்வரின் சாதனைகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு பாசறை உறுப்பினர் 3 புதிய உறுப்பினர்களை அழைத்துவர வேண்டும். அப்படி அழைத்து வந்தால் 3 பிளஸ் 1 கூட்டல் 4 என 2 கோடி பேர் அதில் மட்டுமே இருப்பார்கள் அப்படி இருந்தால் தமிழக முதல்வரின் பலம் டெல்லிக்கு கேட்கும். இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் பாசறை நிர்வாகிகள் அவர் கூறியுள்ள 3 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும். 1 முதலில் மாநகரில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை 90 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்.2 பாசறையில் செயல்படாத நிர்வாகிகள் அல்லது நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருந்தாலோ அவர்களை எடுத்துவிட்டு துடிப்போடு செயல்படும் பாசறை உறுப்பினர்களை மாநகர செயலாளர் மற்றும் அமைச்சர் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து 15 நாட்களுக்குள் முதல்வரின் கவனத்திற்கு பட்டியல் அனுப்ப வேண்டும்.3 அதிமுகவின் சாதனைகளை வீடு,வீடாக சென்று எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 அல்ல 2 அல்ல ஓராயிரம் சாதனைகளை செய்துள்ளார். அதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவிடம் பத்திரிக்கை நிருபர்கள் உங்கள் வெற்றிக்கு என்ன? காரணம் என்று கேட்டபோது அவர் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சில திட்டங்களை செயல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்றார். இதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வரின் ஒப்பற்ற திட்டமான லேப்-டாப் திட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்று சொல்லியுள்ளார்.இப்படி மற்றவர்கள் நமது திட்டத்தை எடுத்து வெற்றி பெறும் அளவிற்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 6 பேர் பிரதமர் வேட்பாளர்களாக வட இந்திய பத்திரிக்கைகள் பட்டியலிட்டுள்ளன.1 நரேந்திரமோடி, 2 சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் யாதவ், 3 பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 4 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி,6 தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் நிறை குறைகளையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.மோடிக்கு மக்கள் செல்வாக்கு குஜராத்தில் இருந்தாலும் அவர் மதச்சாயம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.2 நிதிஷ்குமார் வட இந்தியாவில் அறிமுகமானவர் ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு எந்த அறிமுகமும் இல்லை. 3 மாயாவதி காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கூட எதிர்க்க திராணியில்லாதவர்.4 மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் கம்யூனிஸ்டுகளை சமாளிக்க முடியாமல் பல குழப்பங்களை உண்டு பண்ணியுள்ளார். நம்பகதன்மை இல்லாதவர்.5 முலாயம் சிங் யாதவ் கட்சியோ வன்முறை கட்சி என்ற முத்திரை உள்ளது. 6 வதுதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.இந்தியாவிற்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்று யாரும் இல்லை. அவர் தொண்டுள்ளமும்,துறவறமும் கொண்டவர் எனவே அவர் இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ளவர் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசறை நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஏனென்றால் வெற்றியை தீர்மானப்பவர்கள் nullநிங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே வெற்றியை தீர்மானத்து போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,மாதேஷ்வரன்,ஜெயப்பிரகாஷ்,சண்முகம், கழக பாசறை இணை செயலாளர்கள் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ.,ஆர்.முத்துசாமி,பாசறை துணைச் செயலாளர்கள் பி.ஆர்.மனோகர்,ஜி.பழனிவேல், சி.எம்.விஷ்ணு பிரபு, தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.இரவீந்திரநாத்குமார், புதுகோட்டை பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன்,தர்மபுரி மாவட்ட பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன்,ஆர்.ஆர்.சேகரன், அவைத் தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,எம்.துரைராஜ்,எஸ்.கீதா,இணைச் செயலாளர் டிப்போ ராஜம்மாள், துணை செயலாளர் வி.பன்னீர் செல்வம், மேற்கு தொகுதி செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் சின்னதிருப்பதி ஆறுமுகம்,மேற்கு தொகுதி இணைச் செயலாளர் ஆர்.ராம்ராஜ்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாணவரணி செயலாளர் சக்திவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,
இலக்கிய அணி செயலாளர் உரைமுரசு யூசப், அம்மாபேட்டை பகுதி பேரவை செயலாளர் யாதவமூர்த்தி,முன்னாள் மாநகர செயலாளர் பாலகிருஷ்ணன்,கவுன்சிலர்கள் மார்க்கபந்து,புல்லட் ராஜேந்திரன்,கீதா அன்பழகன்,பாமா கண்ணன்,வட்டபாக செயலாளர்கள் மயில் வெங்கடேசன், ஓம் குமார், சூரமங்கலம் பகுதி பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அம்மாபேட்டை பகுதி பாசறை துணை செயலாளர் கே.டி.ராமச்சந்திரன்,சூரமங்கலம் பகுதி பாசறை எம்.சிவானந்த், கொண்டலாம்பட்டி பாசறை துணை செயலாளர் தங்கதாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாசறை பொருளாளர் என்.தினேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா தகவல்
21 Jan 2026டாவோஸ், இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு
21 Jan 2026நியூயார்க், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


