எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.1 - இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பாசறையை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறஇத்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் சேலம் போஸ்மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர பாசறை செயலாளர் டாக்டர் கே.எஸ்.சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.பாசறை நிர்வாகிகள் கே.சுரேஷ்,டி.கோபிநாத்,ஜி.கீதா,வி.பெரியசாமி,வி.பாலு,ஜி.ஆண்டாள்,மற்றும் எம்.வெங்கடாஜலம்,ஏ.சத்யா,பி.டி.தணிகைவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளவும்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.,மேயர் எஸ்.சவுண்டப்பன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஜி.வெங்கடாஜலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தலைமை வகித்து பேசிய பாசறை மாநில செயலாளரும்,பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது.இங்கு பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,செம்மலை எம்.பி.ஆகியோர் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த போது அதிமுகவில் இதுபோன்ற அமைப்புகள் இல்லை. இருப்பினும் நாங்கள் இயக்கத்திற்காக உழைத்தோம் என்றார்கள். உண்மைதான் நமக்குதான் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.கடந்த சட்டமன்ற தேர்தலிலே பாசறை நிர்வாகிகள் பலருக்கு முதல்வர் தேர்தலில் போட்டியி வாய்ப்பளித்துள்ளார்.பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளார்.ஆசியாவிலேயே இந்தியாவை வழி நடத்தக்கூடிய சிறப்பான தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என பிற நாட்டி வாழ்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி தந்துள்ளார். தமிழகத்தில் பாசறை நிர்வாகிகள் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தெரு,தெருவாக,வீடு,வீடாக சென்று தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.எஸ்.எம்.எஸ்.மூலம் முதல்வரின் சாதனைகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு பாசறை உறுப்பினர் 3 புதிய உறுப்பினர்களை அழைத்துவர வேண்டும். அப்படி அழைத்து வந்தால் 3 பிளஸ் 1 கூட்டல் 4 என 2 கோடி பேர் அதில் மட்டுமே இருப்பார்கள் அப்படி இருந்தால் தமிழக முதல்வரின் பலம் டெல்லிக்கு கேட்கும். இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் பாசறை நிர்வாகிகள் அவர் கூறியுள்ள 3 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும். 1 முதலில் மாநகரில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை 90 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்.2 பாசறையில் செயல்படாத நிர்வாகிகள் அல்லது நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருந்தாலோ அவர்களை எடுத்துவிட்டு துடிப்போடு செயல்படும் பாசறை உறுப்பினர்களை மாநகர செயலாளர் மற்றும் அமைச்சர் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து 15 நாட்களுக்குள் முதல்வரின் கவனத்திற்கு பட்டியல் அனுப்ப வேண்டும்.3 அதிமுகவின் சாதனைகளை வீடு,வீடாக சென்று எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 அல்ல 2 அல்ல ஓராயிரம் சாதனைகளை செய்துள்ளார். அதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவிடம் பத்திரிக்கை நிருபர்கள் உங்கள் வெற்றிக்கு என்ன? காரணம் என்று கேட்டபோது அவர் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சில திட்டங்களை செயல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்றார். இதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வரின் ஒப்பற்ற திட்டமான லேப்-டாப் திட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்று சொல்லியுள்ளார்.இப்படி மற்றவர்கள் நமது திட்டத்தை எடுத்து வெற்றி பெறும் அளவிற்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 6 பேர் பிரதமர் வேட்பாளர்களாக வட இந்திய பத்திரிக்கைகள் பட்டியலிட்டுள்ளன.1 நரேந்திரமோடி, 2 சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் யாதவ், 3 பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 4 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி,6 தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் நிறை குறைகளையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.மோடிக்கு மக்கள் செல்வாக்கு குஜராத்தில் இருந்தாலும் அவர் மதச்சாயம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.2 நிதிஷ்குமார் வட இந்தியாவில் அறிமுகமானவர் ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு எந்த அறிமுகமும் இல்லை. 3 மாயாவதி காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கூட எதிர்க்க திராணியில்லாதவர்.4 மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் கம்யூனிஸ்டுகளை சமாளிக்க முடியாமல் பல குழப்பங்களை உண்டு பண்ணியுள்ளார். நம்பகதன்மை இல்லாதவர்.5 முலாயம் சிங் யாதவ் கட்சியோ வன்முறை கட்சி என்ற முத்திரை உள்ளது. 6 வதுதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.இந்தியாவிற்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்று யாரும் இல்லை. அவர் தொண்டுள்ளமும்,துறவறமும் கொண்டவர் எனவே அவர் இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ளவர் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசறை நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஏனென்றால் வெற்றியை தீர்மானப்பவர்கள் nullநிங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே வெற்றியை தீர்மானத்து போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,மாதேஷ்வரன்,ஜெயப்பிரகாஷ்,சண்முகம், கழக பாசறை இணை செயலாளர்கள் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ.,ஆர்.முத்துசாமி,பாசறை துணைச் செயலாளர்கள் பி.ஆர்.மனோகர்,ஜி.பழனிவேல், சி.எம்.விஷ்ணு பிரபு, தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.இரவீந்திரநாத்குமார், புதுகோட்டை பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன்,தர்மபுரி மாவட்ட பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன்,ஆர்.ஆர்.சேகரன், அவைத் தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,எம்.துரைராஜ்,எஸ்.கீதா,இணைச் செயலாளர் டிப்போ ராஜம்மாள், துணை செயலாளர் வி.பன்னீர் செல்வம், மேற்கு தொகுதி செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் சின்னதிருப்பதி ஆறுமுகம்,மேற்கு தொகுதி இணைச் செயலாளர் ஆர்.ராம்ராஜ்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாணவரணி செயலாளர் சக்திவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,
இலக்கிய அணி செயலாளர் உரைமுரசு யூசப், அம்மாபேட்டை பகுதி பேரவை செயலாளர் யாதவமூர்த்தி,முன்னாள் மாநகர செயலாளர் பாலகிருஷ்ணன்,கவுன்சிலர்கள் மார்க்கபந்து,புல்லட் ராஜேந்திரன்,கீதா அன்பழகன்,பாமா கண்ணன்,வட்டபாக செயலாளர்கள் மயில் வெங்கடேசன், ஓம் குமார், சூரமங்கலம் பகுதி பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அம்மாபேட்டை பகுதி பாசறை துணை செயலாளர் கே.டி.ராமச்சந்திரன்,சூரமங்கலம் பகுதி பாசறை எம்.சிவானந்த், கொண்டலாம்பட்டி பாசறை துணை செயலாளர் தங்கதாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாசறை பொருளாளர் என்.தினேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.