எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு, ஜூலை.7 - ஈரோட்டில் நேற்று ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை கூட்டம் மகாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கே.வி ராலிங்கம் தலைமைதாங்கினார் .ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே மணிகண்டன் வரவேற்றார் .கூட்டத்தில் கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
அறிஞர் அண்ணாவுக்கு பின் னால் மாணவர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. அண்ணாவுக்கு பின் மனித நேயம் மிக்க தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விளங்கினார். அவர் ஆட்சியில் இருந்த 14ஆண்டுகள் தி.மு.கவால் எதையும் சாதிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின் அ.தி.மு.க விற்கு புத்துயிர் கொடுத்தவர் புரட்சி தலைவி முதல்வர் அம்மா தான். அம்மா சோதனைகளையும், வேதனைகளையும் தகர்த்தெறிந்து 3 - வது முறையாக ஆட்சிக்கு வந்தார் . அம்மா பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல் படுத்தி வருகிறார். மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக அ.தி.மு.க உள்ளது. பாசறை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மக்களிடம் எளிமையாக பணியாற்ற வேண்டும்.பதவியை எதிர்பார்க்கமால் நீங்கள்கட்சி பணியாற்றவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் புதியதாக 25 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அம்மா 2 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்டு சாதனைகளை புரிந்துள்ளார். அரசின் நாடித்துடிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்,விவசாயிகள் உள்ளனர். இன்று மாணவ-மாணவிகள் மனது லேப் டாப் கொடுத்த அம்மா பெயரை தான் உச்சரித்துகொண்டிருக்கின்றது. அவர்களுக்கு அம்மா கொடுத்துவரும் உதவிகள் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. கல்விக்கு 17 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் புரட்சி தலைவி அம்மாதான். தமிழர் நலன் ,தமிழர் நலன் என்று கூறிவருபர்கள் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அம்மா ரூ 100 கோடி செலவில் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க உத்திரவிட்டு தமிழர்கள் மனதில் தாயாக விளங்குகின்றார்.பத்திரிக்கைகளில் நரேந்திர மோடி,முலாயம்சிங்யாதவ்,மம்தா, மாயவதி, நிதிஷ்குமார் ,ஜெயலலிதா ஆகியோரில் ஒருவர் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறுகின்றன. இதில் நரேந்திர மோடியை வட நாட்டு மக்கள்தான் ஏற்றுகொள்வர்கள். மம்தாவுக்கு தன் மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளை சாமாளிக்க முடியவில்லை. மாயவதி அன்னிய வர்த்தகத்தை எதிர்க்காததால் மக்களால் தூக்கி எரியபட்டுவிட்டார்.நிதிஷ்குமார் வட மாநில மக்களுக்கு மட்டுதான் அறிமுகம் ஆனாவர்.தென் நாட்டு மக்களுக்கு அவரை தெரியாது. ஆனால் புரட்சி தலை அம்மா தான் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். அவர்தான் இந்தியாவை ஆளும் தகுதி படைத்தவர் . அம்மா அறிவித்த ஒரிருதிட்டங்களை அறிவித்து அதன் முலம் பக்கத்து மாநில முதல்வர்கள் வெற்றி ஆட்சி அமைக்கும் போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் அம்மா ஏன் பிரதமராக வரக்ககூடாது ?இந்தியாவின் பிரதமர் பதவியை முடிவு செய்பவர்கள் தமிழர்கள்தான் .இப்போது ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றும் அம்மா வரும்ஆண்டுகளில் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் அதற்கு நாம் பாடுபடவேண்டும்.குடும்ப பாசத்திற்கு அப்பாற்பட்டவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவரை போலவே அம்மாவும் தியாக உள்ளம்கொண்டவர். ஏழை ,எளிய 66 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி ஒப்பற்ற தலைவியாக அம்மா விளக்கி வருகின்றார். இப்படி பட்ட தலைவியை தான் நாம் பிரதமர்ஆக்க வேண்டும் இவ்வாறு கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் பேசினார் .தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; 16-03-2013 -ஐ இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை தினமாக அறிவித்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, அம்மாவின் இரண்டு ஆண்டு சாதனைகளை வீடு,வீடாக சென்று பிரசுரங்களை வழங்குவது, மாவட்டம் முழுவதும் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ந்துவது, நாற்பதும் நமதே நாளைய பிரதமர் அம்மா என்கிற தாரக மத்திரத்தோடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை ,இளம்பெண்கள் பாசறை தீவிரமாக பணியாற்றுவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெற்றி கரமாக நடத்தி முடித்த முதல்வர் அம்மாவுக்கு நற்றி தெரிவிப்பது, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் தமிழகத்தில உள்ள 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகத்தை ஆரம்பித்தமைக்கும்,மலிவு விலை காய்கறி வழங்கும் திட்டத்தை அறிவித்தமைக்கும், மினரல் வாட்டர் ரூ 10க்கு அரசு பேருந்து, மற்றும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்க செய்தமைக்கும் முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, தொழிலாளர் நலன் காக்கும் அம்மாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்கு களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டிப்பது, கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளராக, தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் அவர்களை நியமனம் செய்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில செயலாளர் ராஜலட்சுமி,எம்.எல்.ஏக்கள் கிட்டுசாமி, பொன்னுசாமி,என்.எஸ்.என் நடராஜன் மேயர் மல்லிகா பரமசிவம்,துணை மேயர் கே.சி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
17 Jul 2025பெங்களூரு, கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.