எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார்.
நான்காவது காலிறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்திய அணி 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரரானார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________
தங்கம் வென்றார் ஜோகோவிச்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸுடன் மோதிய இறுதிப் போட்டியில் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று அசத்தினார். இதுதான் ஜோகோவிச்சின் முதல் தங்கம். மேலும் ஆடவர் டென்னிஸ் ஒலிம்பிக்கில் வயதான வீரர் (37) ஒருவர் தங்கம் பெறுவதும் இதுவே முதல்முறை.
தனது வெற்றியில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தங்கத்தையும் சேர்த்துள்ளார். 2008இல் வெண்கலம் வென்ற ஜோகோவிச்சுக்கு இது 2ஆவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் இரண்டு முறை அலகராஸுடம் தோல்வியுற்ற ஜோகோவிச் இதில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
____________________________________________________________________
மனு பாக்கருக்கு கவுரவம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான மயிரிழையில் ஒரு பதக்கம் நழுவிப்போனது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்து இருப்பார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், "இறுதிப்போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. இரண்டு பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். ஆனால் தற்போது இந்த பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலை இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. என்னுடன் பணியாற்றிய பயிற்சி குழுவினர், உதவியாளர்கள் மற்றும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அனேகமாக இதை விட சிறப்பாக முடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
____________________________________________________________________
அரையிறுதியில் லக்சயா தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சபா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். வெண்கல பதக்கத்திற்கானே போட்டியில் அவர் விளையாட உள்ளார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான விக்டர் அக்செல்சன்னை எதிர் கொண்ட லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார். இன்று ( ஆக.,05) வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் போட்டியில் லக்சயா சென், மலேஷியாவின் லீ ஜி ஜியா என்ற வீரரை எதிர்கொள்கிறார்.
____________________________________________________________________
காலிறுதியில் லவ்லினா தோல்வி
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்வினா காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (ஆக.,04) நடந்த காலிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கடுமையாக போராடி தோல்வி அடைந்தார். லி குயான் 4- 1 என்ற புள்ளிக்கணக்கில் லவ்லினாவை வீழ்த்தினார்.
____________________________________________________________________
தடை தாண்டும் ஓட்டம்: பாருல் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி அடைந்தார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நேற்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாருல் செளத்ரி பங்கேற்றார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால், தடை தாண்டும் ஓட்டத்தில் பாருல் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
அதன்படி, தடை தாண்டும் ஓட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 3 மீட்டரை 9:23.39 விநாடிகளில் கடந்தார். இந்தத் தொடரில் இது அவரின் சிறப்பான ஆட்டமாகும். எனினும் பட்டியலில் அவர் 8வது இடத்தை மட்டுமே பிடித்தார். கென்யாவின் பேட்ரிஸ் சேப்கோயேச் 9:13.56 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதால், பாருல் செளத்ரி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
____________________________________________________________________
பீச் வாலிபாலால் விவாதம்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற பெண்கள் பீச் வாலிபால் ஆட்டத்தில் ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினி உடை அணிந்து போட்டியில் களமிறங்கிய நிலையில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்
22 Jan 2026டெல்லி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
-
அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 15,000 கோடி ரூபாய் நஷ்டம்
22 Jan 2026டெல்லி, அகமதாபாத் விபத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய ராசிபலன்
22 Jan 2026


