எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உள்ளன.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க.வின் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, இந்தித் திணிப்புகள் கொள்கைகள், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகளின் தொகுப்பு வருமாறு:-
தொகுதி மறுவரையறையை ஏன் எதிர்க்கிறீர்கள்..?
சிறு திருத்தம். தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம். மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம் - மக்களின் நல்வாழ்வு - வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.
மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத்தான் எதிர்க்கிறாம்.
1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என நீங்கள் கோருவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை பற்றி பேசாமல் மக்களை திசைதிருப்பவே என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு தங்களின் பதில் என்ன?
தி.மு.க.வின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள். மத்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின்படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது.
1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் இன்னொரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்து வருகிறது. இந்தி திணிப்பு பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?
இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த ஐம்பதாண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.
தமிழ்நாடு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த விழிப்புணர்வுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது. அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. தி.மு.க. ஆதரவு மாணவர்கள் – இளைஞர்கள் - தொண்டர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தி.மு.க. தலைவர்கள் கொடுமையான சிறைத் தண்டனையை எதிர்கொண்டனர். பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.
அதுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி - பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்.
நீங்கள் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறீர்கள் என பா.ஜ.க. உங்கள் மீது வைக்கும் குற்றசாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக்கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது. நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று- அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ்நாட்டைப் பார்த்து- தி.மு.க.வைப் பார்த்து பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை வலிமையான எதிரியாக பார்க்கிறீர்களா? அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
இது தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
உங்கள் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முத்திரைத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, நல்லாட்சிக்கு இலக்கணமாக திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்கும் மக்கள் போற்றுகிறார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீரழிந்து கிடந்த நிர்வாகம் இப்போது சீரடைந்து இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை தலைநிமிர்ந்து செயலாற்றுகிறது. தொழில் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகள், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி என தமிழ்நாடு முதன்மை மாநிலமாக – முன்னனி மாநிலமாக நிற்கிறது.
இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், இந்த அரசின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூற முடியாத எதிர்க்கட்சிகள், கற்பனை குற்றச்சாட்டுகளைக் கூறி விதண்டவாத அரசியலும் - வீண் பிரச்சாரமும் செய்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது ஒவ்வொரு திட்டத்திலும் பயன் பெறும் மக்களுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்துவிட்டு பத்திரமாகத் திரும்புகிறவர்களுக்கும் தெரியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
350 ட்ரோன்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த துருக்கி..!
14 May 2025புதுடில்லி : இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர் களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
டெல்லி: மாற்று வீரர் அறிவிப்பு
14 May 202518-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
14 May 2025தூத்துக்குடி : ஜி.பி. முத்து மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? - முகமது ஷமி மறுப்பு
14 May 2025மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரோகித் - கோலி...
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
பாக். குண்டுகளை செயலிழக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரம்
14 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைப் பகுதி அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழை
14 May 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
-
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.16-ல் வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
14 May 2025சென்னை : கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்ற
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
-
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? - ஒரே தேர்வு மையத்தில் 167 மாணவிகள் சென்டம்
14 May 2025செஞ்சி : செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.