எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர்த் திட்டங்கள் முதலான பல அடிப்படை வசதிகள் காரணமாக தமிழ்நாடு விரைந்து நகர்மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீட்டிலும், பொதுமக்கள் பங்களிப்பு 183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு 12,71,006 மனித நாட்கள் பெறப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள் 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீர் கழிக்கும் இடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடி மதிப்பீட்டில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளனஉட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின்கீழ், 28 புதிய பஸ் நிலையப் பணிகள் ரூ.968.08 கோடி திட்ட மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு திருச்சி, நாமக்கல் மாநகராட்சிகள், சங்கரன் கோவில், குளச்சல், கூடலூர் (தேனி) நகராட்சி பஸ் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எஞ்சிய 23 பஸ்நிலையங்களின் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன.கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், 28 புதிய பஸ் நிலையங்கள் ரூ.279.92 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு 3 பஸ் நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னேரி, குன்றத்தூர், மானாமதுரை, மதுக்கரை, புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 14 மாநகராட்சிகளில் ரூ.3,360.64 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
23 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் 3,65,555 எண்ணிக்கையிலான தெருவிளக்கு கள் மற்றும் புதிதாக 1,11,327 LED தெரு விளக்குகளும் ரூ.577.28 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு 98 சதவீதப் பணிகள் நிறைவடைந்து உள்ளன.முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.196.56 கோடி மதிப்பீட்டில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டுவதற்கு அனுமதித்து; முதற்கட்டமாக 71 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை 5.01.2024 அன்று திறந்து வைத்தார். அவற்றுடன் தற்போது 93 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எஞ்சிய 7 மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த மையங்கள் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு அறிவுசார் தகவல்கள் கிடைக்கவும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதன் மூலம் அறிவுத் திறனை வளர்ப்பதற்கும் நுழைவு வாயில்களாகத் திகழ்கின்றன.
மாநகராட்சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகளும், நகராட்சிகளில் ரூ.118.80 கோடியில் 281 புதிய வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 176 பணிகள் முடிவடைந்து மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 905 வகுப்பறைகள் ரூ. 132.66 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.மழைநீர் வடிகால்கள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109.094 கி.மீ. நீளத்திற்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து இயற்கை எய்திய பணியாளர்களின் 1,423 வாரிசுகளுக்கும், பேரூராட்சிகளில் 124 வாரிசுகளுக்கும், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 105 பணியாளர்களின் வாரிசுகளுக்கும் ஆக மொத்தம் 1652 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.24 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்பட்டு; மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 10,283 மனுக்களில் 99.97 சதவீதம் மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 34,385 மனுக்களில் 99.91 சதவீதம் மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 46,241 மனுக்களில் 98.3 சதவீதம் மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 85,464 மனுக்களில் 97.4 சதவீதம் மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14,669 வீடுகள் கட்டப்படுகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழ்நாடு அதிவேகமாக நகரமாயமாகி இந்தியத் திருநாட்டில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டத்தக்கவையாக அமைந்து பத்திரிகைகளாலும், ஊடகங்களாலும் பாராட்டப்படுவதை நம்மால் அன்றாடம் காண முடிகிறது என்பதே உண்மையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
விரைவில் நல்ல செய்தி வரும்: ராமதாஸ்
08 Jun 2025சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. விரைவில் நல்ல செய்தி வரும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
வேலூர் தீர்த்தகிரி கோவிலில் 92 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம்
08 Jun 2025வேலூர் : வேலூர் தீர்த்தகிரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
அமித்ஷாவை வரவேற்க காத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
-
கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜ.க. போராட்டம்
08 Jun 2025பெங்களூரு : கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர்.&n
-
கொலம்பியாவில் அதிர்ச்சி சம்பவம்: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
08 Jun 2025போகோடா : கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்ட
-
விருதுநகர் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Jun 2025சென்னை : விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ
-
ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது
08 Jun 2025புதுடெல்லி : நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.
-
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது: ட்ரம்ப் அதிரடி
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
08 Jun 2025புதுடில்லி : 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாளை (ஜூன் 10ம் தேதி) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.
-
ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா கெலாட் - பைலட் சந்திப்பு
08 Jun 2025ஜெய்ப்பூர் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மாணவர்களின் இசைப்பள்ளி சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை புதிய அரசாணை
08 Jun 2025சென்னை : தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை
-
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது: அமெரிக்காவில் போராட்டம்
08 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.
-
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
08 Jun 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குவிந்தனர்.
-
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10 பேர் காயம்
08 Jun 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
-
வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
08 Jun 2025சென்னை : வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
-
இன்று வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
08 Jun 2025திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது.
-
புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் பதிவு
08 Jun 2025புதுச்சேரி : அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்ச அளவாக நேற்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது.
-
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: இணைய சேவை முடக்கம் - ஊரடங்கு உத்தரவு அமல்
08 Jun 2025இம்பால் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-06-2025.
08 Jun 2025 -
கடந்த 4 நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 லட்சம் பயணிகள் பயணம்
08 Jun 2025வண்டலூர் : கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
-
'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் மஸ்க்
08 Jun 2025நியூயார்க் : 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பதற்றம் காரணமாகவே அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருகிறார் : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
08 Jun 2025சென்னை : பதற்றம் பா.ஜ.க.
-
அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்திப்பு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்தித்து பேசினர்.
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார்.
-
உணர்ச்சிவசப்படுகிறார்: எலான் மஸ்க் மீது ஜே.டி.வான்ஸ் விமர்சனம்
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்து விட்டார்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.