எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) காலை தொடங்கிவைத்துப் பேசியது: “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், மக்களிடம் ஆலோசனை செய்தேன். தூத்துக்குடி வந்த பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளிக்க ஒப்புதல் வழங்கினேன். உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் நான் கலந்து கொண்டு பேசிய முதல் நிகழ்ச்சி இதுவே.
நான் ஆட்சிக்கு வந்தபோது, கரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது. நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி செயல்பட்டோம். அதேபோல், இன்று (நேற்று) இந்தத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் மீண்டும் அமைச்சர்கள் அனைவரும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி, அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை தொடங்குகின்றனர்.
கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள். இதற்காக நிறைய திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தத் துறையை சிறப்பாக வழிநடத்துகிறார். அதனால்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஐ.நா. சபையே பாராட்டியுள்ளது.
இன்று (நேற்று) தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 1,256 முகாம்கள் நடக்கப்போகின்றன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கக் கூடிய ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாம்களிலும் மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். முகாம் வரும் பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான சோதனை செய்யப்படும். பொது மருத்துவரின் அறிவுரைப்படி இசிஜி, காசநோய், தொழுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்படவிருக்கிறது.
தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம். இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமே, முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மக்களுக்கு தொகுத்து ஒரு கோப்பாக வழங்கப்படும். அந்த அறிக்கையை கொண்டு எதிர்காலத்தில் எந்த மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
நம் அரசின் குறிக்கோள் நகர்ப்புறத்தில் வசதி வாய்ப்புடைய மக்கள் மருத்துவ சேவைகளைப் பெறுவதுபோல், கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகளாக என்றழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள் பயன்பெற அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் ஒருவரின் உயிரைப் பாதுகாக்கப் போகும் திட்டம். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையானதாக திகழ வேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறாக மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நிலையை பாதுகாப்பதிலும் தமிழ்நாடு தான் முதன்மையானதாக திகழும் என்ற நம்பிக்கையோடு, நலமான வாழ்வு பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 6 days ago |
-
ஆணவப்படுகொலைக்கு உரிய நீதி: சீமான் உறுதி
02 Aug 2025சென்னை : ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
02 Aug 2025சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
02 Aug 2025சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா..? - மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
உத்திரமேரூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
02 Aug 2025சென்னை : உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு
02 Aug 2025சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-08-2025.
02 Aug 2025 -
நடிகர் மதன்பாப் காலமானார்
02 Aug 2025சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி
02 Aug 2025புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் மாற்றி விடுதலை செய்யப்பட்ட கைதி
02 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் கைதி மாற்றி விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 2 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
02 Aug 2025சென்னை, தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
-
த.வெ.க. நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் ஆனந்த் படத்தை பயன்படுத்த தடை
02 Aug 2025சென்னை, த.வெ.க. நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20-வது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்
02 Aug 2025டெல்லி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அறிக்கை: ராகுல் மீது ராஜ்நாத்சிங் தாக்கு
02 Aug 2025பாட்னா, ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தகுதியானது அல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் க
-
பாலியல் வழக்கில் தண்டனை அறிவிப்பு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 'ஆயுள்'
02 Aug 2025பெங்களூரு, பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்
02 Aug 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
02 Aug 2025சென்னை : இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
02 Aug 2025தூத்துக்குடி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இ.பி.எஸ். வழிபாடு
02 Aug 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தேன்: பிரதமர் மோடி பேச்சு
02 Aug 2025காந்தி நகர், கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
02 Aug 2025சென்னை, பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒரேநாளில் 106 பேர் பலி
02 Aug 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
கச்சா எண்னெய் இறக்குமதி விவகாரம்: இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளது: ட்ரம்ப்
02 Aug 2025வாஷிங்டன் : இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
02 Aug 2025தேனி, அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.