முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      தமிழகம்
P R Kawai 2025-05-19

Source: provided

புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.

அரியானாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதியை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடியை பறித்துக்கொண்டனர். இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் மேற்படி கைது நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து இருந்தது.

குறிப்பாக, கோர்ட்டுகளின் பெயர், முத்திரை மற்றும் நீதித்துறை உத்தரவுகளை மோசடியாகப் பயன்படுத்துவதும், குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதும் மிகவும் கவலைக்குரிய விஷயம் என கூறினர். பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. பதிலளிக்க அறிவுறுத்தி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து