எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் டிசம்பர் 6-ம் தேதி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ம் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தை பின்தொடர வழிவகுத்தது.
போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இர்பான் அகமது என்பவரையும், ஒரு டாக்டரையும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் டாக்டர் அதீல் ராதர் கைது செய்யப்பட்டார். இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்துக்கு பிறகுதான் அரியானா மாநிலத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் தங்களது விசாரணையை அரியானாவில் தொடர்ந்தபோது பரிதாபாத்தில் டாக்டர் முசமில் ஷகீலும், பெண் டாக்டர் ஷாகீத்தும் பிடிபட்டனர். முசமில் ஷகீலின் அடுக்குமாடி அறையில் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. இந்தநிலையில்தான் 10-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாத டாக்டர் குழுவில் இணைந்திருந்த உமர் முகமது, தான் விலைக்கு வாங்கிய ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிபொருட்களை எடுத்துச்சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார். இந்த கார் அன்றைய தினம் டெல்லியில் சுற்றிய காட்சிகள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் எடுக்கப்பட்டு, அதில் உமர் முகமது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் 2 கார்களை உமர் முகமது வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அதனை தேடினர். இதில் ‘போர்டு’ நிறுவனத்தின் ’ஈகோஸ்போர்ட்’ என்ற சிவப்பு நிற காரும் ஒன்று. அந்த காரின் பதிவு எண்ணை டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநில போலீசாருக்கு அனுப்பி தேடச் செய்தனர்.
இந்தநிலையில் அந்த காரை போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடித்தனர். அரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்துக்கு அருகே அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை பரிதாபாத் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதுதவிர மேலும் ஒரு காரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. சம்பவத்திற்கு முன்பாக செங்கோட்டை அருகே ராம்லீலா மெய்டன் ஆசாம் அலிசாலையில் உள்ள ஒரு மசூதியில் டாக்டர் உமர் தங்கியிருந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் செங்கோட்டை அருகே காரில் சென்றுள்ளார்.
3 கார்கள் வாங்கப்பட்டதை கவனிக்கும்போது அவற்றை டெல்லியில் ஆங்காங்கே நிறுத்தி வெடிக்க வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் ஒத்திகை பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. வெடித்து சிதறிய கார் கடந்த தீபாவளிக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் முசமில் ஷகீனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின்படி கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அவர் பல முறை டெல்லி செங்கோட்டை பகுதிக்கு வந்துசென்றுள்ளார். எனவே அவர் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாகத்தான் செங்கோட்டையை சுற்றி பார்த்ததும் தெரியவந்தது. ஆனால் தீவிர ரோந்துப்பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்திலும் சதித்திட்டத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. டிசம்பர் 6-ம் தேதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) கார் வெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அடுத்தடுத்து வெடிபொருளை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை போலீசார் முறியடித்து வந்த ஆத்திரத்தில் 10-ம் தேதி உமர் முகமது காரை வெடிக்க செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் மற்றும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து செங்கோட்டை பகுதியில் சுற்றி வந்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2025
13 Nov 2025 -
நெல்லையில் வருகிற 21-ம் தேதி கடலம்மா மாநாடு: சீமான் தகவல்
13 Nov 2025நெல்லை, நெல்லையில் வருகிற 21-ந்தேதி கடலம்மா மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
13 Nov 2025சென்னை, மேகதாது அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
13 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்று 2-வது முறை உயர்ந்து விற்பனையானது.
-
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டால
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையிட வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Nov 2025சென்னை : தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: டிச.6-ம் தேதி தாக்குதல் நடத்தும் சதிச்செயல் திட்டம் முறியடிப்பு
13 Nov 2025புதுடெல்லி, டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தமிழகத்தில் மொத்தம் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
13 Nov 2025சென்னை, தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பீகாரில் 243 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
13 Nov 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 243 தொகுதிகளில் பதிவான வாக்குக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்
13 Nov 2025சென்னை, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
-
பாக்.கில் விரைவில் அரசியல் மாற்றம்? அதிகாரத்தை கைப்பற்றினார் ராணுவ தளபதி அசிம் முனிர்
13 Nov 2025இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தை ராணுவ தளபதி அசிம் முனிர் கைப்பற்றியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் பலி
13 Nov 2025திரிப்பொலி: லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
13 Nov 2025ஸ்ரீநகர், டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 3 டாக்டர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்தான் டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி
13 Nov 2025டெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு
13 Nov 2025சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க்: அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


