எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், ஜன, 30 - ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் மாதத்தில் இலங்கை சம்பந்தமாக மறுபடியும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
பல்வேறு பிரச்சினைகள், தீர்வு காணப்படாமல் எந்தவித முன்னேற்றமும் இன்றி இருப்பதற்கு இலங்கையை பொறுப்பேற்க வைப்பதிலும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அக்கறை இருப்பதால்தான் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலங்கள் பறிக்கப்படுவது, மத உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு வேதனைதான் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2009ல் நடந்த போரின்போது நடந்த குண்டுவீச்சில் இறந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் புதைக்கப்பட்ட இடம் என தெரி வித்து அமெரிக்க பிரதிநிதி பார்வையிடும் படம் ஒன்றை அண்மையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது கொழும்பின் ஆத்திரத்தை உசுப்பி விட்டது.
இந்நிலையில், போரின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற அச்சுறுத்தல் வாள் போல் இலங்கையின் மீது தொங்கிக்கொண்டே இருக்கி றது. நல்லிணக்க குழுவின் பரிந்துரை களை அமல்படுத்த இலங்கைக்கு இன்னும் 18 மாதங்களே இருக் கிறது. இந்த நடவடிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் மீண்டும் மோதல் மூளக்கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்காவின் நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நாங்களே சொந்தமாக அதற்கு வழி வைத்திருக்கிறோம். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார் விவகாரங்களில் முன்னேற்றம் காணாமல் இலங்கை நிதானமாக செயல்படுவதால் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுவது நியாய மாகாது. புகார் விஷயத்தில் நட வடிக்கை எடுப்பதில் முடிந்த வகையில் அக்கறை காட்டுகிறோம்.
போருக்கு பிறகு இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வடக்கு மாகாணத் தில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அரசியல் அதிகார பகிர்வு நடவடிக்கையின் ஆரம்பம் இது என்றார் வீரதுங்க.ஆனால், பெரும்பான்மை சிங்களர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக தமிழர்கள் புகார் கூறுகின்றனர். இலங்கை ராணு வத்தின் அத்துமீறல் புகார்கள் பற்றி விசாரிக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டதாகவும், மருந்து, உணவுப்பொருள்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் தட்டிக் கழிக்கிறது இலங்கை என்றும். இதை இலங்கை சரி செய்யா விட்டால் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டிவரும் என்றும் வாஷிங்ட னில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் ஜான் சிப்டன் எச்சரித்தார்.
உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தியதை நிரூபிப்போம் என்று வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது.
போரின்போது இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச சமுதாயத்தின் மேற்பார் வையில் கணக்கெடுப்பு நடத்துவது என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றையும் வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசும் போரில் உயிரிழந்தோர், காணாமல் போனவர் கள்பற்றி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. போரின் போது இலங்கை ராணுவம் நடத்தியதாக்குதலில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டதாக ஐநாவின் முந்தைய அறிக்கை தெரிவித்தது. ஆனால் இத்தகைய புகார்களை இலங்கை மறுத்து வருகிறது.
போர்க்குற்றம் தொடர்பாக மார்ச்சுக்குள் நடவடிக்கை எடுத்து முன்னேற்றம் கண்டு, தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த தவறினால் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக ஐநா ஆதரவிலான விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த நவம்பர் மாதம் எச்சரித்தார்.
போரின்போது இலங்கை ராணுவம், புலிகள் தரப்பில் இழைக்கப் பட்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கையே விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளில் 2 தீர்மானங்களை ஐநா கவுன்சில் நிறைவேற்றியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.