எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மார்ச் - 2 - தமிழகம் மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கான ஆயுட்காலம் வருகிற மே மாத மத்தியில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மார்ச் 19 ம் தேதி வெளியிடப்படும்.
அன்றைய தினமே (மார்ச் 19) வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்றும் அவர் கூறினார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ம் தேதி என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30-ம் தேதி என்றும் அவர் அறிவித்தார். தமிழகம், புதுவை மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுதலே அமுலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சம் என்றும் அவர் கூறினார். மேலும் முதன் முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13 ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற்றாலும்கூட இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து அதாவது வருகிற மே மாதம் 13 ம் தேதிதான் நடைபெறும் என்றும் குரேஷி கூறினார். ஓட்டு எண்ணிக்கை இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தல்களோடு மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையையும் குரேஷி வெளியிட்டார்.
கேரள மாநிலத்திற்கான வாக்குப் பதிவும், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறுகிறது. இங்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் 62 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக நடைபெறும் வாக்குப் பதிவில் 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 4 ம் தேதியும், அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ம் தேதியும் நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்கான வாக்குப் பதிவு 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அந்தந்த மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 2011-12 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே இந்த 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேற்கு வங்கமாநிலம், கேரளா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முஸ்தீபு செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒழுங்குபடுத்துவதிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
17 Jul 2025திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி