எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாத்தூர், ஆக.10 - சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை, குகன்பாறை, செவல்பட்டி, ஆலங்குளம் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு அமைச்சர் உதயகுமார் நன்றி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:- என்னை சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தொகுதி மக்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு அறிவித்த நலத் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரச்செய்வேன். ஏழை, எளிய மக்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். உயர்த்திய முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள், மாணவர்கள் கல்விக்கு லேப்டாப், இலவச வீட்டுமனை பட்டா, பெண்களுக்கு தையல் இயந்திரம், மாணவர்கள் உயர்கல்விக்கு கல்விகடன், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, கிராமப்புறங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மயானச்சாலை வசதி, குடிநீர்வசதி, சாலை வசதி, பஸ் வசதி, பள்ளியில்லாத கிராமங்களில் பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிகளை தரம் உயர்த்துதல், வெம்பக்கோட்டை அணையை நவீனப்படுத்துதல், மருத்துவவசதி ஏற்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள், ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வேன். அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி கிடைக்கவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், பஸ் பயணிகளுக்கு நிழற்குடை, புதிய பேருந்து வழித்தடங்கள், கிராமப்புற கோயில்களை சீரமைத்தல் மற்றும் பல திட்டங்களும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும். என் சட்டமன்ற அலுவலகத்தில் தரப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் என்னை எப்போது வேண்டுமானாலும், நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இரவு பகல் பாராமல் விருதுநகர் மாவட்ட மக்களுக்கும், சாத்தூர் தொகுதி மக்களுக்கும் தமிழக முதல்வரிடம் வளர்ச்சி திட்டங்களை தனி கவனம் செலுத்தி பெற்றுத்தருவேன். விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டமாக விளங்க அயராது பாடுபடுவேன் என்றார். மேலும் நான் நன்றி தெரிவித்த போது பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை, ரேஷன்கார்டு, தெருவிளக்கு, மயான சாலை தடையில்லா மின்சாரம், நூலகம் ஆகியவைகள் முக்கிய கோரிக்கை மனுக்களாக தரப்பட்டிருந்தது. அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தூரில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் காகித பூ அறிக்கைகளை தயார் செய்து 27 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன், கடந்த மூன்றே மாதஆட்சியில் பல சாதனைகள் செய்துள்ளோம். சாத்தூரில் உயர்நிலைப்பள்ளி, மற்றும் பல்கலைக்கழக அரசு கலைக்கல்லூரி, சாத்தூர் - சென்னை பஸ் சர்வீஸ் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு தரும் அனைத்து நல உதவிகளையும் தொகுதி மக்களுக்கு விரைவில் பெற்றுத்தர சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதிகாரிகள் உடன் கிராமத்திற்கு வந்து உடனடி தீர்வு கண்டு துரித நடவடிக்கை எடுக்க ஆவன செய்வேன். ஐந்து ஒன்றியங்களை சேர்த்து சாத்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சனையை தாமிரபரணி மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தையும் விரைவில் கொண்டு வருவேன். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இக்கூட்டத்தில் சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், முன்னாள் அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, சக்திகோதண்டம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சுப்புராம், வாசன், கெளரிநாகராஜன், சாத்தூர் வேலாயுதம், அம்மா பேரவை முனீஸ், இளைஞர் அணி சண்முககனி, கேபிள் கண்ணன், சாமி, சுப்புலெட்சுமி, ராமராசு, தாசன், கடம்பாறை ராஜ், காசிபாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், ஆலங்குளம் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை ராமராசு, செவல்பட்டி முருகன், முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், அண்ணா பேரவை தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.