எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.குறிப்பாக பொன்னேரி வட்டம்,பழவேற்காடு சுற்றுலா மற்றும் மீனவப்பகுதிகளில் பெருத்த சேதத்தை வர்தா புயல் ஏற்படுத்தியது.திருவள்ளுர் மாவட்டத்தில் வர்த்தா புயல் நிவராணப் பணிகளுக்கென 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டன.வேரோடு மரங்கள் வீட்டின் மீது சாய்ந்தது,மீனவ கட்டுமரங்கள்,பைபர் போட்டுகள் காற்று மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூக்கி வீசப்பட்டது.மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டது.2000க்கும் மேற்ப்பட்ட கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தரைமட்டமாகின.புயல் காற்றுடன் கடல் அலைகள் சீற்றத்தால் கரைபுரண்ட உப்பு நீரினால் நிலத்தடி நீர் உப்பானது.மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக முன்கூட்டியே முகாம்களில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துதல்,சாலை பணிகள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று முடிந்தன.முகாம்களில் தங்கிருந்த மக்கள் பத்திரமாக வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.பழவேற்காடு பகுதியில் வர்தா புயலால் ஏற்பட்ட பெருத்த சேதம் பற்றிய கணக்கெடுப்பு முடிந்து நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.படகுகள்,வலைகள்,மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சேதங்களுக்காக 4 கோடியே 42 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அளவிலான உதவித்தொகைகள் வழங்க்கப்பட்டது.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின்,மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நலத்திட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மாவின் ஆட்சியில் பழவேற்காடு பகுதியில் வாழும் 25 கிராமங்களில் உள்ள மீனவர்களை கடல் மீன்பிடி மீனவர்களாக அறிவித்து தேசிய கடல் நீர் மீனவர்களாக அனைத்து சலுகைகளையும் பெறவைத்தார். மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகையினை 5000 ரூபாயாக உயர்த்தினார்.13 கடலோர கிராம மக்கள் பழவேற்காடு ஏரியினை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.இன்னும் அவர் எண்ணிய எண்ணமெல்லாம் இந்த ஆட்சியில் மீனவ சமுதாய மக்களுக்கு கிடைக்கப்போகிறது.மேலும் பழவேற்காடு ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையான முகத்துவாரம் தூர்வாரி சரிசெய்யும் பணிகள் மிக விரைவாக தொடங்கப்பட இருக்கின்றது.இதற்கான பணிகளை மேற்க்கொள்ள நாளை முதல் அதற்கான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுர் எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி எம்.எல்.ஏ.சிறுணியம் பலராமன்,மாவட்ட வருவாய் அலுவலர் முத்து,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி மீனவ பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிமேலழகர்,மாங்கோடு மோகன்,சுமித்ராகுமார்,கோட்டைக்குப்பம் சந்திரசேகர்,சாட்டாங்குப்பம் கஜேந்திரன்,தேசப்பன்,வைரவன்குப்பம் ரகு,மீன்வளத்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,பயனாளிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
பெங்களூரு சாலைகளில் பள்ளங்கள்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து
20 Sep 2025பெங்களூரு, பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
20 Sep 2025திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.