எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.குறிப்பாக பொன்னேரி வட்டம்,பழவேற்காடு சுற்றுலா மற்றும் மீனவப்பகுதிகளில் பெருத்த சேதத்தை வர்தா புயல் ஏற்படுத்தியது.திருவள்ளுர் மாவட்டத்தில் வர்த்தா புயல் நிவராணப் பணிகளுக்கென 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டன.வேரோடு மரங்கள் வீட்டின் மீது சாய்ந்தது,மீனவ கட்டுமரங்கள்,பைபர் போட்டுகள் காற்று மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூக்கி வீசப்பட்டது.மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டது.2000க்கும் மேற்ப்பட்ட கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தரைமட்டமாகின.புயல் காற்றுடன் கடல் அலைகள் சீற்றத்தால் கரைபுரண்ட உப்பு நீரினால் நிலத்தடி நீர் உப்பானது.மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக முன்கூட்டியே முகாம்களில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துதல்,சாலை பணிகள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று முடிந்தன.முகாம்களில் தங்கிருந்த மக்கள் பத்திரமாக வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.பழவேற்காடு பகுதியில் வர்தா புயலால் ஏற்பட்ட பெருத்த சேதம் பற்றிய கணக்கெடுப்பு முடிந்து நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.படகுகள்,வலைகள்,மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சேதங்களுக்காக 4 கோடியே 42 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அளவிலான உதவித்தொகைகள் வழங்க்கப்பட்டது.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின்,மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நலத்திட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்
மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மாவின் ஆட்சியில் பழவேற்காடு பகுதியில் வாழும் 25 கிராமங்களில் உள்ள மீனவர்களை கடல் மீன்பிடி மீனவர்களாக அறிவித்து தேசிய கடல் நீர் மீனவர்களாக அனைத்து சலுகைகளையும் பெறவைத்தார். மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகையினை 5000 ரூபாயாக உயர்த்தினார்.13 கடலோர கிராம மக்கள் பழவேற்காடு ஏரியினை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.இன்னும் அவர் எண்ணிய எண்ணமெல்லாம் இந்த ஆட்சியில் மீனவ சமுதாய மக்களுக்கு கிடைக்கப்போகிறது.மேலும் பழவேற்காடு ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையான முகத்துவாரம் தூர்வாரி சரிசெய்யும் பணிகள் மிக விரைவாக தொடங்கப்பட இருக்கின்றது.இதற்கான பணிகளை மேற்க்கொள்ள நாளை முதல் அதற்கான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுர் எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி எம்.எல்.ஏ.சிறுணியம் பலராமன்,மாவட்ட வருவாய் அலுவலர் முத்து,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி மீனவ பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிமேலழகர்,மாங்கோடு மோகன்,சுமித்ராகுமார்,கோட்டைக்குப்பம் சந்திரசேகர்,சாட்டாங்குப்பம் கஜேந்திரன்,தேசப்பன்,வைரவன்குப்பம் ரகு,மீன்வளத்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,பயனாளிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.