எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் நவ.14குமாரபாளையத்தில் உள்ள கல்வி அறக்கட்டளையில் ரூ.20 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜே.கே.கே.நடராஜா தொழில் அதிபர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உறவினர் மகள் செந்தாமரை என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தனர். தொழில் அதிபர் நடராஜா 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை தனக்கு பிறகு தனது மனைவி தனலட்சுமி நிர்வகிக்க வேண்டும் என்று நடராஜா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 1995 ஆம் ஆண்டு நடராஜா இறந்துவிட்டார். அதன்பிறகு அறக்கட்டளையின் வாரிசு நான் தான் என்று செந்தாமரை அறிவித்தார். இதனால் நடராஜாவின் மனைவி தனலட்சுமிக்கும், வளர்ப்பு மகள் செந்தாமரைக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் உதவியோடு செந்தாமரை இந்த அறக்கட்டளையை தன்வசமாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.நானும் எனது கணவரும் கூட்டாக சேர்ந்து 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் பல பள்ளி,கல்லூரிகளை நடத்தி வந்தோம்.கடந்த 1995 ல் எங்கள் வளர்ப்பு மகள் செந்தாமரையும், அவரது கணவர் கிருஷ்ணராஜூவும் போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அதற்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது பினாமி பழனி முருகன்,குமாரபாளையம் மாணிக்கம்,ஈரோடு வக்கீல் பழனிசாமி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு என் கணவர் மற்றும் என் கையெழுதையும் போலியாக போட்டுள்ளனர். என் கணவரையும் கொலை செய்து என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் விசாரணை செய்து தடயவியல் நிபுணர் அறிக்கை பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அவரது பினாமி பழனி முருகன்,ஈரோடு வக்கீல் பழனிசாமி,குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து செந்தாமரை, அவரது கணவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் டிரஸ்ட் சொத்து, அரசு உதவி பெறும் கல்லூரி, பள்ளி நிலம், கட்டிடம் உள்பட அசையும் சொத்துக்கள், அனைத்தையும் கல்வித்துறை அனுமதியின்றி ஈரோடு இந்தியன் வங்கியில் அடமான வைத்து ரூ.20 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்.
அதன் மூலம் சாத்தூர் ராமச்சந்திரன் பினாமி பழனிமுருகன் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.செந்தாமரை உள்ளிட்டோர் எங்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றாவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜே.கே.ஜே.நடராஜாவின் வளர்ப்பு மகளும்,ஜே.கே.ஜே.நடராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மேனுமான செந்தாமரை,அவரது கணவர் கிருஷ்ணராஜ்,பழனிமுருகன், வக்கீல் பழனிசாமி,தி.மு.க.பிரமுகர் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேர் மீது சதி செய்தல்,நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல்,மோசடி செய்தல்,ஆள்கடத்தல், போலி ஆவணம் தயார் செய்தல், போலி ஆவணம் தாக்கல் செய்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



