எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான். தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான். தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது. ‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.
முயற்சியில் வெற்றி கிடைக்க மூன்று விஷயங்களில் நாம் சரியாக இருக்க வேண்டும். 1. நம்முடைய நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும். 2. நம் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். 3. எல்லோரும் முயலும் பொதுவான வழியாக நம் வழியும் இல்லாமல், சற்று அறிவு நலனும் கெட்டிக்காரத்தனமும் கொண்டதாக நம் வழி இருக்க வேண்டும்.
தொடக்க நிலை இடையூறுகள் என்பது எந்தத் துறையில் புதிய முயற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கும் இயற்கையாக ஏற்படுகிற ஒன்று. ஒரே தாவலில் முதல் படியிலிருந்து பத்தாவது படியை தாண்ட முடியுமா? ஓவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். சாதாரண தரையில் நடக்கும் போதே கால் இடறுவதும் எங்காவது கல்லில் கால் விரல் இடித்துக் கொள்வதும் சகஜம். படியேறும் போது கால் வலியும், மூச்சு இறைப்பும் ஏற்படுத்துவதும் சகஜம். இதே போல் புதிய துறையில் ஈடுபடும் போது ஏற்படும் இடையூறுகள், சிக்கல்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதைப் புரிந்து கொள்ளாமல் தொடக்க நிலை இடையூறுகளைக் கண்டே பின்வாங்கி விடக்கூடாது. பிரச்சினைகளை நாம் தான் வெல்ல வேண்டுமே தவிர நம்மை பிரச்சினை வென்று விடக்கூடாது. மனிதர்கள் இரண்டு கால்களாலும் நடக்கிறார்கள். இதை இயற்கை ஒரே நாளில் அளித்துவிட்டதா? குழந்தை குப்புறக் கவிழ்ந்து, பின் தவழ்ந்து, கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்து, நாளடைவில் எழுந்து நின்று, சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கப் பழகி, பின்னரே தன் சொந்தக் கால்களால் நிற்கிறது; நடக்கிறது; ஓடுகிறது. இதுபோலவே தான், ஒவ்வொருவரும் தனது லட்சியப் பயணத்தில் அடி எடுத்து வைக்கும்போது ஒவ்வொரு அடியாகத்தான் முன்னோக்கி நடக்க வேண்டும். அடுத்த அடி எடுத்து வைக்கும் அவசரத்தில், சறுக்கி விழுந்து, கீழ்ப்படிக்கே மீண்டும் போய்விடக்கூடாது.
இன்னும் சிலர் உண்டு. எந்த ஒரு புதிய துறையில் இறங்குவது சம்பந்தமாக யோசனை கேட்டாலும், “அது சரி வராது” என்று கூறி, நமது தன்னம்பிக்கையைக் குலைத்து விடுவார்கள். உண்மையில் அவர்களுக்கு, அந்தத் துறையைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றால், எதுவும் தெரியாது. வாத்தியார் வேலை பார்க்கிறவரிடம் வேறு எந்தத் தொழிலையும் பற்றி ஏதாவது அனுபவம் இருக்குமா? இருக்காது. ஆனால் அவரிடம் மளிகைக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்; என் யோசனைசரிதானா? என்று கேட்டுப் பாருங்கள்; “அதெல்லாம் சரி வராது; கடைத் தெருவில் ஏற்கனவே ஏழெட்டு மளிகைக்கடை இருக்கிறது. அதுவே காத்தடிக்கிறது. வியாபாரமே இல்லை. மேலும் கடைத் தெருவில் வாடகைக்கு கடை பிடிக்க வேண்டுமானால் ஐந்து லட்சம் பகடி கேட்பான். அப்புறம் இடத்துக்கு அட்வான்ஸ், கடை வாடகை, கரண்ட் சார்ஜ், அப்புறம் மளிகை சரக்கு வாங்கப் பணம்; வேலைக்கு ஆட்கள் வைக்க வேண்டும்; அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் இப்படியெல்லாம் முதல் போட வேண்டும். போட்ட முதலை எடுக்கவே ஐந்து வருடம் ஆகிவிடும். இப்படித்தான் கணேஷ் ஸ்டோர் மளிகைக்கடையில் வேலை பார்த்த பையன், தனியாகப் போய் சின்ன கடைத் தெருவில் கடை போட்டான். செம ‘லாஸ்’ பிறகு கடையை மூடிவிட்டு, கோயமுத்தூரில் முட்டைக்கடை வைத்திருக்கிறானாம்” என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடத்தி விடுவார்.
ஜவுளிக்கடை வைத்து நன்றாக சம்பாதிக்கும் ஒருவரை அணுகி நானும் ஜவுளிக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்று யோசனை கேட்டுப் பாருங்கள். தன் தொழிலுக்கு போட்டியாக வேறொருவர் வருவதை எந்த ஒரு வணிகரும் விரும்பமாட்டார். இது மனித இயல்பு. அதன்படியே இவரும், “எனய்யா நான் மாட்டிக்கொண்டு தவிப்பது போதாதா? இதுவரைக்கும் பத்து லட்ச ரூபாயை இந்த தொழிலில் நஷ்டமடைந்து விட்டேன். வெளியிலே வரவேண்டிய பாக்கியே நான்கு லட்ச ரூபாய்க்கு நிற்கிறது. போன மாசம், கடை சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் என் பொண்டாட்டி நகையை அடகு வைத்து சம்பளம் கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்” என்பார். உண்மையில் அவர் தனது ஜவுளிக்கடை தொழில் மூலம் ஒகோ என்று சம்பாதிக்காவிட்டாலும், ஏதோ லாபகரமாகத்தான் தொழில் நடத்திக் கொண்டிருப்பார். கடை தொடங்கும் போது பத்தாயிரம் ரூபாய் சரக்கு இருந்த அவரது கடையில் இப்போது ஐந்து லட்ச ரூபாய்க்கு சரக்கு இருக்கும். பேங்கில் பணம் மனைவிக்கு நகை என்றும் சம்பாதித்து வைத்திருப்பார். ஆனால் ‘பஞ்சப்பாட்டு’ பாடி தன் தொழிலுக்கு வருகிறவரை வர விடாமல் செய்துவிடுவார்.
அத்தோடு போயிற்றா? பட்டுக்கோட்டைக்கு வழி என்னடா என்று கேட்டால் கொட்டைப் பாக்கு காசுக்கு ரெண்டு என்று சொன்ன கதையாக ஆகாத ஊருக்கு போகாத வழி காட்டுவார். “எவர்சில்வர் பாத்திரக்கடையை எனக்குத் தெரிந்து ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பாத்திரக்கடை வைத்தான் குருசாமி. இன்று மூன்று மாடி வீடு கட்டிவிட்டான். கார் வாங்கி விட்டான். பெரிய பையனை அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்கு அனுப்பப் போகிறானாம். செஞ்சா அதுமாதிரி தொழில் செய்யனும். சும்மா ஜவுளிக்கடையில் பனியன் ஜட்டி விற்று என்னத்தை லாபம் பார்க்கிறது. கடை வாடகை கொடுக்கவே வருமானம் போதாது” என்று கூறி தன்னிடம் ஜவுளித் தொழிலுக்கு யோசனை கேட்டவனுக்கு எவர்சில்வர் தொழிலுக்கு வழி சொல்லுவார்.
கேட்பவன் மன உறுதி இல்லாதவனாகவோ, அல்லது தனக்கு யோசனை சொல்லும் நபர் நல்லவர் என்று நம்புகிறவனாகவோ இருந்தால், அவர் சொல்படியே எவர்சில்வர் பாத்திரத் தொழில் செய்யும் யோசனைக்கு மாறி விடுவான். எனவே, உங்களுக்கு அனுபவம் உள்ள தொழிலோ, ஆர்வம் உள்ள தொழிலோ இரண்டில் ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் தான் உங்கள் மனம் ஒன்றும் அதில் தங்கு தடைகள் ஏற்பட்டாலும் மனம் சலித்துக்கொள்ளாது. தொடர்ந்து முயன்று வெற்றிகாணும். எனவே ஆர்வமற்ற துறையில், வெறும் ஆசையை மட்டும் அடித்தளமாகக் கொண்டு முயன்று, தோல்வி கண்டுவிட்டால், பிறகு உங்கள் மனம் புதிய முயற்சி எதிலும் இறங்கவே பயப்படும். புதிய மனிதர்களைக் கண்டாலும், இவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று அச்சம் கொள்ளும். ஆனால் ஆர்;வமுள்ள துறையில் ஈடுபடும்போது, மனம் தோல்வி கண்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்;; முந்தைய தோல்விகளால் பாடம் கற்றுக் கொண்டு புதிய முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும். நாம் ஓரிடத்திற்குப் போக விரும்பி நடந்தோ, வாகனத்திலோ போகிறோம். குறுக்குப்பாதை என்று நினைத்து ஏதோ ஒரு தெரு வழியாகப் போகிறோம். ஆனால் உண்மையில் அது நாம் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் வேறு இடத்திற்குப் போகும் பாதை, உடனே என்ன செய்கிறோம்? வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறோமா? அல்ல. திரும்பி வந்து சரியான பாதையைக் கண்டறிந்து அதில் பயணிக்கிறோம். காரணம், நாம் போய்ச் சேர வேண்டிய இடம் எது என்ற இலக்கு முடிவாகிவிட்டது. போகும் பாதை தான் நமக்குத் தேவை. அதுபோல் வெற்றியாளர்களுக்கு வெற்றி இலக்கு என்ன என்பதை அவரவர் உள்மனம் உணர்த்தி விடும். அதைச் சென்றடைய முதலில் சென்ற முயற்சி பாதை தவறாக இருந்தாலும் அவர்கள் சோர்ந்து விடுவதில்லை. முயற்சியைக் கைவிட்டு திரும்பிய இடத்துக்கே வந்து விடுவதில்லை. பாதையை மாற்றிக் கொள்வது போல் முயற்சியை மாற்றிக் கொண்டு தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வார்களே தவிர, சோர்ந்து விடுவதில்லை.
தனது அதீதமான அறிவுக் கூர்மையாலும், கெட்டிக்காரத்தனத்தாலும் இவர் தங்கள் பாதையிலிருந்து தடம் புரண்டு விடக்கூடும். ஒழுக்கக் குறைவு, தவறான நோக்கம், கெட்டவர் சேர்க்கை போன்றவற்றால் வழி தவறிப்போய் வாழ்க்கையில் படுதோல்விப் பள்ளத்திற்குள் விழுந்து விடுவர். இப்படி பலர் பரிதாபப் பள்ளத்தாக்கில் விழுந்து அழிந்ததையும் நாம் படித்துமிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். எனவே, அடிப்படையில் ஆரோக்கிய மனம் உள்ளவர்களை, கெட்ட சகவாசம் கிட்டே அணுகாது. அணுகி, முயற்சித்து, இவர்களின் பணத்தால் தாங்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆதாயம் அடையாளம் என்று கணக்கிட்டுக் கொண்டு வருபவர்கள் கூட, இவர்களது ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கண்டு இவர்களால் தங்களுக்குப் பயன் ஏற்படாது என்று விலகிச் சென்று விடுவர். எனவே, எதற்கும் விட்டுக் கொடுக்காத பண்பு நலன் தான் நம் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது. ‘இது என்னால் முடியாது; அதற்கான சாமர்த்தியம் எனக்குப் போதாது’ என்று எண்ணாதீர்கள்; சொல்லாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு குறைவான சாமர்த்தியம் இருந்த போதிலும், அந்த முறையான அளவிற்கான சாமர்த்தியத்திற்கு உரிய வெற்றியை அடையவாவது உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பது உண்மையல்லவா?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை



