எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.17 - இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக்கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிட அனைத்து கட்சி குழு ஒன்றை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான வெள்ளச்சாமி, கணேசன், பன்னீர், முத்துக்குமார், தீர்ப்புக்கனி, ஜெயபால் ஆகியோருக்கும், அதற்கு முன்னர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிகுமாருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது. அத்துடன் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீnullக்கம் செய்ய வேண்டும் எனவும், அத்துடன் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், படுகொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைச்சிறுத்தைகள் அனைவருக்கும் இந்த மாநிலச் செயற்குழு மனமார்ந்த வாழ்த்துகளயும், பாராட்டுகளயும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்களபெளத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நார்வே அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஈழச் சிக்கலில் அரசியல்ரீதியான தீர்வு காண்பதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பாக செயல்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் இனத்திற்கும், தமிழீழத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை உறுதிப்படுத்தியுள்ள நார்வே அரசின் அறிக்கை தொடர்பாக, இந்திய அரசு அனைத்துலக சமூகத்திற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
சிங்கள இனவெறிக் காடையர்களால் தமிழக மீனவர்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நீnullடித்து வருகிறது. அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராஜபக்சேவும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடிய பின்னரும் சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிடுவதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான கொலைத் தண்டனையை விலக்குவதற்கு தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அவ்வணுமின் உலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமெனவும் ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது
15 Sep 2025அமெரிக்கா : நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.
-
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
15 Sep 2025பியாங்காங் : அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
2026 டிசம்பர் முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
15 Sep 2025குமரி : குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
-
10 நாட்கள் கெடு நிறைவடைந்தது: அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம் : செங்கோட்டையன் பேட்டி
15 Sep 2025ஈரோடு : அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
பேரறிஞர் அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் எடப்பாடி பழனிசாமி புழஞ்சலி
15 Sep 2025சென்னை, சந்தேக கேள்விகளுக்கு தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் என்று அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்ணா என்றால் தமிழ்நாட
-
மும்பையில் நடுவழியில் நின்ற மோனோ ரயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு
15 Sep 2025மும்பை : மும்பையில் மோனோ ரயில் அந்தரத்தில் நின்றதயைடுத்து பயணிகள் தவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
15 Sep 2025பஞ்சாப் : பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினா
-
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 பேர் காயம்
15 Sep 2025கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பா? வருமான வரித்துறை மறுப்பு
15 Sep 2025புதுடெல்லி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
நாகரிகப் பயணம் படத்தின் இசை வெளீயீட்டு விழா
16 Sep 2025RICH மற்றும் DSK மூவிஸ் இணைந்து வழங்க, தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாகரிகப் பயணம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில்