எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை.-தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ‘மாற்றுத்திறானாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2016 ஆம் ஆண்டு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதினை” சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சு.மலர்விழி, வழங்கி கௌரவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரியும் தொண்டு நிறுவனங்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தமிழக அரசு ஆண்டுதோரும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்தில் சேவை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களில் சிறப்பாக சேவை புரிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சு.மலர்விழி,இ.ஆ.ப., தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னோடி திட்டமாக இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்து அவ்விடத்தில் ரூ.20,00,000ஃ- (இருபது இலட்சம் ரூபாய்) மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தொழில் பயிற்சி இல்லத்தை கட்டமைத்துள்ளார். தமிழகத்தில் வேறு எந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக இத்தகைய சிறப்பான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்களாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்ற தவழும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தொழில் பயிற்சி இல்லத்தை உருவாக்கியதுடன் இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை சேர்த்து அவர்களுக்கு நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய வகையில் அரசின் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து தொழில் பயிற்சி வழங்கவும், தொழில் பயிற்சியின் மூலம் வருமானம் ஈட்டவும் வழிவகை செய்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமையால் சுயமாக முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
மேலும், அரசு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டதுடன், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியை மாற்றுத்திறனாளிகளின் நலத் திட்டங்களுக்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி உள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதில் நடமாட ரூபாய் ஐந்து கோடி செலவில் சாய்வு தளப்பாதைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியுடன் செல்லும் வகையில் மின்தூக்கி(லிப்ட்) ஆகியவற்றை நிறுவிட திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரின் இத்தகைய சிறப்பான சேவைகளை பாராட்டி ‘மாற்றுத்திறானாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்கான 2016ஆம் ஆண்டு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது” 26.07.2017 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சு.மலர்விழி, இ.ஆ.ப அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) முகமது நசிமுத்தின்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ