எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகம் நன்றாக செயல்பட்டாலே போதும், உடல் கட்டுக்கோப்புடன் வாழலாம். தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முகககிய பணியை செய்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான உப்புக் கல்களையும், தாதுக்களையும்பிரிக்கிறது.
சிறுநீரகங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும், உடலில் இருக்கும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்தி வைப்பதிலும், மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் பாதுகாத்து வருகின்றன. முன்பு உண்ணும் உணவும், உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக இருந்தது. செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள், சுத்தமற்ற குடிநீர், குளிர்பானங்கள் எல்லாமும் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன.
இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில் மெல்ல மெல்ல பாதிப்படைய அரம்பித்து விடும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காரணமாகவும் கிட்னி செயல் இழக்கும். உடலை சரிவர பராமரிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுநீரக நோய்கள் என்பது சத்தமில்லாமல் உடலை மோசமடைய வைக்கும். சீக்கிரமே சிறுநீரக நோயை கண்டுபிடித்ததால் சிறப்பான சிகிச்சையின் மூலம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள், சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், எத்தனை முறை கழிக்கிறோம், சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். சிலநேரம் சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படலாம். தொற்றுக்கள் சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கலாம். இது வேறு காரணங்களாகவும் இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
கை கால்களில் வீக்கம், இரத்த சோகை, உடல் சோர்வு, இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து விடும், யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.
குமட்டல் வாந்தி இருக்கும், சிறுநீரக குழாயில் கல் இருந்தால் கீழ் முதுகில் வலி ஏற்படும். இதை இயற்கையான முறையில் வெளியேற்றலாம்.
நோயை தவிர்க்க : இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல். ஆரோக்கிய உணவுப் பழக்கம். உடல் எடையை கட்டுக்குள் வைத்தல். தேவை இல்லாத மருந்து மாத்திரைகளை உண்ணாதிருத்தல். போதிய நீர், இளநீர், ஆப்பிள், பழச்சாறு, எலுமிச்சை சாறு, மோர், பால் குடித்தால் நோய் வராமல் தடுக்கலாம். நீராகாரம் சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். இறைச்சி, உலர் பழங்களை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், மசாலா குறைக்க வேண்டும். வாழைத்தண்டு அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கால்சியம் கல் உள்ளவர்கள், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்க்கவும். ஆக்சலேட் கல் இருப்பவர்கள், எல்லாக் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சோயா மற்றும் கோகோ, சாக்லெட், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.
யூரிக் ஆசிட் கற்கள் : எக்ஸ்ரேவில் தெரியாது. புரதச் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது.
ஸ்ரூவைட் கற்கள் : நோய்த் தொற்று, சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இது மிக விரைவிலேயே பெரிதாகும்.
சிஸ்டின் கற்கள் : மரபியல் ரீதியாகத் தோன்றக்கூடியது. சிறுநீர் தெளிவானதாக வெளியேறும் அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. திரவ உணவை எடுத்துக்கொள்வது போன்றவை கல்லை வெளியேற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இப்படிச் செய்யும்போது பெரும்பாலான சிறிய கற்கள் தானாகவே சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாட்களில் வெளியேறிவிடும். மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.
சர்க்கரை நோயும் சிறுநீரகமும் : சர்க்கரை நோய் தாக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறும்போது அவர்களின் சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான்கள் தடினமாகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி அகற்றும். அதன் திறன் பாதிக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். இதனால், நெப்ரானில் கசிவுகள் ஏற்படுகின்றன. அல்புமின் அதிக அளவில் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது. பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் பாதிப்பின் வேகத்தைக் குறைக்கலாம். புரதம் வெளியேறினால் சிறுநீரகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். ஆரோக்கியமான உணவு, இயன்முறை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சர்க்கரை நோயின் பக்கவிளைவுகளை முழுமையாக 3 மாதத்தில் குணப்படுத்தலாம்.
உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகமும் : சிறுநீரகங்களின் செயல்பாடானது அதற்கு ரத்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் ரத்தக் குழாயின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயைப் பாதிக்கிறது. சர்க்கரை நோயோடு, உயர் ரத்த அழுத்தமும் சேரும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிவிடுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தின் மிக மோசமான விளைவுகளுள் ஒன்று சிறுநீரகச் செயல் இழப்பு உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகத்தின் திறனைப் பாதித்து உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு முற்றிவிடுகிறது.
பெண்களை அதிக அளவில் தாக்கும் சிறுநீரகப் பிரச்சினை : சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரையுள்ள குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் பாதை என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஈகோலை பாக்ட்டீரியாவால் சிறுநீர்ப் பாதையில் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்தக் கிருமி நம்முடைய குடலில் இருக்கக் கூடியது. மலம் கழிக்கும்போது இந்தக் கிருமி வெளியேற்றப்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இந்தக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாக உள்ளது. உடல் உறவின் மூலமும் இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகிறது.
உடலுறவில் ஈடுபட்டதும், சிறுநீர் கழித்துவிட வேண்டும். இதனால் பாக்ட்டீரியா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் சிறுநீர் பரிசோதனை (யூரின் கல்சர்) பரிந்துரைக்கப்படும். மருத்துவரை அனுகவும். ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உணவு பழக்க வழக்கங்கள் : பொட்டாசியம் மிகுதியாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும். வாழைப்பழம், உலர்ந்த பழங்கள், மாதுளை, பப்பாளி, வெண்ணைப் பழம் தவிர்க்கவும்.
உப்பைக் குறைக்கவும், உப்பைக் கு¬றைத்தால் உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், தாகம், வீக்கம் போன்ற சிக்கல் வராது.
சாப்பிடக் கூடியவை : தண்ணீர்விட்டான் கிழங்கு: சமைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது கல் மற்றும் Urinary infection வராமல் தடுக்கும். சிறுநீரக செயல்பாடுகள் சீராகும்.
பூண்டு : இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும்.
தர்பூசணி : நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உயர்ரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண உதவும். சீறுநீரக கல் கூட கரைந்து வெளியே வரும்.
இயன்முறை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் : இடுப்பு தளம் உடற்பயிற்சியினால் இவை அனைத்தும் மேம்படுத்த முடியும்.
சிறுநீர்ப்பை கட்டுப்பாடு, சிறுநீர் அடங்காமை, சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் தேக்கம், பாலீடுபாடு உணர்தல்.
(Increase sexual sensation and orgasmic potential
ஆயுர்வேத மருந்து : ஆயுர்வேத மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்தத்திற்கு 3 மாதங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சிறுநீரக நோய் வராது. (Renal artery disease) சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும். Diabetic Retinopathy, Dabetic Nephropathy, Diabetic Nerropathy மாரடைப்பு, பக்கவாதம், DVT (Deep Vein Thrombresis) ஆழ் ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு. இவை அனைத்திற்கும் ஒரே மருந்தில் தீர்வு கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.