எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது. மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் உணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.
நிகழ்வு : “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை! வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.
கால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா? உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது? நிலவுக்குச் செல்வதா? அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா?
இரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் : துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.
சேவை : அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும். உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.
மற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.
கதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.
ஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். மறுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.
சேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் : தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ