எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்றார்
தற்போது கொடிவேரி அணைக்கட்டு பாசனங்களான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் தடப்பள்ளி பாசனப் பகுதியில் சுமார் 7500 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதற்கு பாய் நாற்றாங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை 15-நாட்களுக்குள் நடும்போது தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் கூடுவதால் இந்த முறை விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது.
கோபி வட்டாரத்தில் மேற்படி பாய் நாற்றாங்கால் மூலம் தயார் செய்த நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை செங்கலரைக்கரை பகுதியில் கரட்டடிபாளையம் சுப்பிரமணியம் என்பவரது வயலில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் வறட்சிக்கு பிறகு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திற்கு உணவு தானிய உற்பத்தி இலக்காக 3 இலட்சத்து இரண்டாயிரத்து எட்நூற்று இருபத்து ஏழு மெ.டன்கள் (3,02827 மெ.டன்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எய்துவதற்கு நெல், சிறுதானியம், பயறுவகைகள் ஆகிய பயிர்களை தீவிரமாக சாகுபடி மேற்கொள்ள வேளாண்மைத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், மானாவாரி பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 2500 ஏக்கர் கொண்ட தொகுப்பு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, வேளாண்மை வணிகம் உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 20 சிறு, குறு விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி 50 குழுக்களுக்கு 1000 விவசாயிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பேட்டியின் போது கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பத்மநாபன் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியிலிருந்து கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் வருகை தந்துள்ள இறுதி ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியர் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இயந்திர நடவு பயிற்சி ஏற்பாடுகளை கோபி வட்டார அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாவிஷ்ணு, தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்று விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் மின்தடை அறிவிப்பு
19 Sep 2025திருவாரூர் : த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் இன்று மின்தடை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.