எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் போக பாசனத்திற்காக முல்லைபெரியார் அணையிலிருந்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண்குடி பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரியாறு அணையிலிருந்து நேற்று முதல் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரால் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர் சாகுபடி நிலம், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் சாகுபடி நிலம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்தில் 488 ஏக்கர் சாகுபடி நிலம் உட்பட பதிவு பெற்ற இருபோக சாகுபடி நிலங்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர் இருப்பு 127.2 அடியாக உள்ளது. நீர் வரத்து 1467 மி.க வந்து கொண்டிருக்கிறது. மேலும், முதல் போக நெல் சாகுபடிக்குத் தேவையான நெல் இரக விதைகளான என்.எல்.ஆர்-34449 134 மெ.டன்னும், டி.கே.எம்.-13 43 மெ.டன்னும், கோ-51 7 டன்னும் மாவட்டத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
நெல் விதைகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானியமாக கிலோவிற்கு ரூ.20-ம் விதைக் கிராமத்திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 50 சதவீத மான்யமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதையினை விதை நேர்த்தி செய்யத் தேவையான அம்மா உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்திட போதுமான அளவு இருப்பு வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ளது. நெல்லில் இயந்திர நடவு மேற்கொள்ள ஹெக்டேர் ஒன்று ரூ5000 வீதம் 600 ஹெக்டருக்கு ரூ.30.00 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்திற்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா 1543 மெ.டன்னும், டி.ஏ.பி 1498 மெ.டன்னும், பொட்டாஸ் 983 மெ.டன்னும், கலப்பு உரங்கள் 1942 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு பயிர்களை நடவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக வேளாண்மை அலுவலகத்தில் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதைகளை விவசாயிகள் பெற்று பயனடையுமாறும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், பேபி அணை பலப்படுத்தப்பட்டவுடன் முல்லை பெரியார் அணையில் 152 அடி வரை நீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், நகர செயலாளர்கள் தேனி முருகேசன், பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், தேவராம் சீனிவாசன் முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், பி.சி.பட்டி பொறுப்பாளர் தீபன்சக்கரவர்த்தி, செயற்பொறியாளர் (பெரியாறு வைகை வடிநில கோட்டம்) சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


