முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கவனம் தேவை

சிறுவயதில் குழந்தைகள் W வடிவில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை நாம் ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், குழந்தையின் இடுப்பு சுழற்சியில், தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும், தசைகள் சிதைவுற்று, சுருங்கி, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது. எனவே பெற்றோர்கள் இதை கண்காணித்து மாற்ற வேண்டும்.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

100 விதமான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்ட விலங்கு எது தெரியுமா?

100 விதமான ஒலிகளை எழுப்பும் விலங்கினம் எது தெரியுமா.. அது பூனைதான்.நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை. நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும். அவ்வளவு ஏன்...! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது. பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. .நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த ஹிட்லர் அஞ்சி நடுங்கிய ஒரே விலங்கினம் பூனைதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago