செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நம்மில் பெரும்பாலோனோர் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி காந்தியிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியை வடிவமைத்தவர்கள் பக்ரூதீன்தியாப்ஜியும் அவரது மனைவி சுரேயாவும் தான். இதற்கான பொறுப்பை நேரு, பக்ரூதீனிடம் அளித்தார். இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் அவர்கள்தான் வடிவமைத்தனர். தேசிய கொடிக்கு ஏற்ற வண்ணத்தை நெய்து கொடுத்தவர் சுரேயா. 1947 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இவர்கள் நேருவிடம் அளித்த கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐஎம்ஓ, வாட்ஸ்அப் வீடியோ கால், பேஸ்புக் வீடியோ கால் என பல வீடியோ சாட்டிங் வசதிகள் வந்த போதிலும் முதன் முதலாக புகழ்பெற்றது ஸ்கைப் தான். குரூப் காலிங், மெசெஜ் சாட்டிங் என பல அம்சங்கள் கொண்ட ஸ்கைப், அதன் வெர்ஷனை மார்ச் மாதம் முதல் மேம்பட்ட பதிப்பில் வழங்க உள்ளதால் பழைய வெர்ஷன் இயங்காது என மைரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர் இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம். முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம்.
பூம் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம் ஒலியையே மிஞ்சும் விமானமாம். மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து விடலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரத்தில் சென்று விடலாம். சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான்.
பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


