முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஈறு பிரச்சனையா?

நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.

நாம் எப்போதும் இறந்த காலத்தில் தான் வாழ்கிறோம்

நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை  அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...

பணமே இல்லையாம்

சிங்கப்பூரில் 61 சதவீதத்தினரும், நெதர்லாந்தில் 60 சதவீதத்தினரும், பிரான்ஸில் 59 சதவீத மக்களும்,  ஜெர்மனியில் 33 சதவீதத்தினரும், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து கின்றனர். எனவே மேலே கூறியுள்ள நாட்டிற்குச் செல்லும் போது ரூபாய் நோட்டுகள் பற்றி கவலைப்படாமல் சென்று வரலாம்.

எல்லாம் 40 வயது வரைதான்

சிறுவயதில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் பின்னர் தவறு செய்தாலும் இளமை காலத்தில் உடல் தாங்கிக் கொள்ளும். அதற்காக என் உடல் பாறையையே கரைத்து விடும் என்று முட்டாள்தனமாகவும் நினைக்கக் கூடாது. எல்லாம் 40 வயது வரைதான். அதற்கு பிறகு சுகர், பிர்ஷர் என்று எல்லாம் வந்து விடும். தவறான பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகியிருந்தால் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று இப்போதே யோசியுங்கள்.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கைரேகை தீவு எங்கிருக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு கட்டை விரல் ரேகை போல காட்சியளிக்கும் இந்த படத்தில் உள்ளது ஒரு தீவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆக வேண்டும். இப்படி ஒரு தீவு குரோஷியா நாட்டில் உள்ள அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கும் உலர்ந்த பாறைகளின் குவியல் தான் இதற்கு கைரேகை போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது. Baljenac என்று அழைக்கப்படும் இந்த குட்டி தீவில் 23 கிமீ பரப்பு அளவுக்கு இது போன்ற பாறைகள், கற்கள் பரந்து விரிந்து நீண்ட சுவர்களை போல காணக் கிடக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதை ஐநா பாரம்பரிய பட்டியலில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என குரோஷிய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago