இந்தியாவில் பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக ஜம்முவில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலம் தண்ணீருக்கு 1,178 அடி உயரத்தில் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலம் ஆகும். இது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 30 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நவீன தொழில் நுட்பம் மனித இயல்பையே புதிய திசையை நோக்கி மாற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக மைக்ரோ சிப் டெக்னாலஜி தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக மாறி வருகிறது. மேலும் இந்த தொழில் நுட்பம் தறபோதைய பெருந்தொற்று கால கட்டத்தில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தங்களது தனித்தன்மையை பாதுகாக்கவும் மிகவும் உதவி வருவதாக இதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சுவீடனில் வசிக்கும் பொது மக்களில் சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்களது அடையாள அட்டையை மைக்ரோ சிப்பாக மாற்றி தங்களது தோலுக்கு கீழே பதித்துக் கொண்டு வருகின்றனர். ஒரு தொழில் நுட்பம் எதிர்கால சந்ததியை எவ்வாறு மாற்றப் போகிறது என்பதற்கு சாட்சியாக இந்த உடலுக்குள் பதித்துக் கொள்ளும் மைக்ரோ சிப் நடைமுறைகள் மாறி வருகின்றன. முன்பு அறிவியல் புனைவு திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த இது போன்ற சம்பவங்கள் நிஜமாகி வருகின்றன. இதில் இன்னும் சிலர் இந்த உடலில் பதித்த மைக்ரோ சிப் மூலம் ரயில் பயண சீட்டு, கிரெடிட் கார்டுகள், வீட்டில் மின் சாதனங்கள் அவ்வளவு ஏன் கதவை கூட இது போன்ற உடலில் பதித்த மைக்ரோ சிப் மூலம் திறந்து மூடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த தொழில் நுட்பம இந்திய நகரங்களை எட்டுவது வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடி படமாக வெளியாகியுள்ள 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த படம் 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தை தவிர, தற்போது அறிமுகமாகியுள்ள பாகுபலி சேலைகள் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளதாம்.
இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.
நார்வேயில் கடும்பாறைகளாலான தீபகற்பத்தின் அடியில் உலகின் முதல் கப்பல் சுரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளது.
மின்சாரத்தில் இயங்கக்கூடிய சைக்ளோட்ரான் என்ற தானியங்கி பைக்கில், ஒரே சமயத்தில் இரண்டு பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்ளோட்ரான் தானியங்கி பைக்கில் இரு பயணிகளும் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு செல்லலாம். எல்லா காலங்களிலும், அதாவது, குளிர்காலம், வெயில்காலம், மழைகாலத்திலும் இந்த வாகனத்தை இயக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
- வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.
- திரோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமான் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
11 Feb 2026


