முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நடந்து செல்லும் அதிசய மீன்

ரெட்ஹேண்ட் மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருக்க, டாஸ்மானியாவின் தென்கிழக்குக் கடல்பகுதிக்கு டைவிங் பயிற்சி சென்றவர்கள் ரெட் ஹேண்டைப் பார்த்துள்ளனர். அதென்ன ஹெட் ஹேண்ட் மீன். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை மீன்ரெட்ஹேண்ட். துடுப்புகளை கைகளைப் போல இது பயன்படுத்துகிறது. தரையில் கைகளை ஊன்றி குழந்தை தவழ்வதைப் போல கடலின் மேற்பரப்பில் தவழ்கிற ஆற்றல் வாய்ந்தது ரெட்ஹேண்ட். தண்ணீருக்குள் நீந்துவதை, நடப்பதை அதிகமாக விரும்புகின்ற மீன் இது. கடலுக்கு அடியில் உணவு தேடும்போது தன் கால்களால் நடந்து கைகளால் உணவைத் தேடி உண்கின்றது. அதே போல மற்ற மீன்கள் தன் செவில்களினால் நீந்துகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஹேன்ட் ஃபிஸ் என அழைக்கப்படும் இந்த மீன் தன் கைகள் மற்றும் கால்களால் நீந்துகின்றன.

கப்பல் சுரங்கம்

நார்வேயில் கடும்பாறைகளாலான தீபகற்பத்தின் அடியில் உலகின் முதல் கப்பல் சுரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளது.

whats app-ஐ திறக்காமலேயே மெசேஜ் அனுப்ப...

whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant  செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

பார்வை பத்திரம்

நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி கண்கள் உலர்கிறது. இதனால், கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபட்டு உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பறிபோகுமாம்.

அனைவருக்கும் ஏற்றது

பழங்களில், வாழைப்பழத்தில் மட்டும் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்துக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago