மார்பக புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கிரில்டு சிக்கன் போன்ற வாட்டிய இறைச்சியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதாம்.மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளாதவர்களை விட அந்த இறைச்சியை உட் கொள்பவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.
க்ராஸ்ஹெல்மெட் என்பது அடுத்ததலைமுறை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகும், இது ஒலி கட்டுப்பாடு, ஜிபிஎஸ், 360˚ காட்சித்திறன் என நமது சவாரி அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும். இதுவே முதல் ஒலி கட்டுப்பாட்டு செயல்பாடு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஹெல்மெட் ஆகும். பின்புறம் வரும் வாகனங்களின் காட்சி உங்கள் ஹெல்மெட்டின் முன்பகுதியில் உள்ள திரையில் தெரியும் என்பதால் திரும்பி பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இது மட்டுமின்றி , இந்த கிராஸ் ஹெல்மெட் ஜீபிஎஸ் வசதி உள்ளதால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதையை காண்பிக்கும். 360 கோணம் பார்க்க முடியும் என்பதால் நீங்கள் சாதாரணமாக பார்க்க முடியாத சாலையின் பகுதியை கூட இதன் மூலம் பார்க்க இயலும் என்பது கூடுதல் வசதி.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான். இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது. அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.
தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.
உலகில் முதன் முறையாக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1927 இல் நடைபெற்றது. முதல் சுற்று லண்டனிலும், இறுதி சுற்று பெர்மிங்காமிலும் நடைபெற்றது. முதன் முதலில் இந்த விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோ டேவிஸ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் முறை ஸ்நூக்கர் விளையாட்டு வீரராவர். வெற்றி பெறுபவருக்கு பரிசாக 6 பவுண்டுகள் 10 ஷில்லிங் பணம் பரிசாக அளிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும்: இந்திய ராணுவ தளபதி தகவல்
26 Jul 2025ஸ்ரீநகர், ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை அனுப்பி இருக்கும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
-
அரியலூரில் இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்பு
26 Jul 2025திருச்சி : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்
-
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை: முதல்வர் ஸ்டாலின்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க.
-
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன: சுப்ரீம்கோர்ட் அதிருப்தி
26 Jul 2025புதுடில்லி, ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
-
25 ஓ.டி.டி. தளங்களுக்கு தடை
26 Jul 2025புதுடெல்லி, 25 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
-
தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
26 Jul 2025தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய
-
கொரில்லா தாக்குதல்: பலூசிஸ்தானில் 23 வீரர்கள் பலி
26 Jul 2025பலூசிஸ்தான் : பலூசிஸதானில் கொரில்லா தாக்கியதில் அதிகாரி உள்பட 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு ஏதும் இல்லை: தமிழக அரசு
26 Jul 2025சென்னை, பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த இங்கி., வீரர் ஜோ ரூட்
26 Jul 2025மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை முறியடித்துள்ளார்.
-
நினைவு நாணயம் வெளியிடுவது எங்களின் பாக்கியம்: பிரதமர் மோடி
26 Jul 2025சென்னை : ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே.சுதீஷ் மனு
26 Jul 2025சென்னை : தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி எல்.கே..சுதீஷ் மனு அளித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள்: அரசு பெருமிதம்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்
-
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
26 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
கிட்னி திருட்டு விவகாரத்தில் கடும் நடவடிக்கை: அமைச்சர்
26 Jul 2025சென்னை : கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம்.
-
26-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
26 Jul 2025புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
-
3-வது நாளாக சரிந்த தங்கம் விலை
26 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் (ஜூலை 26) குறைந்து விற்பனையானது.
-
உத்தரபிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி
26 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஈரானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 8 பேர் பலி
26 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
-
விழாக்கோலம் பூண்ட தூத்துக்குடி: பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
26 Jul 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
26 Jul 2025புதுடெல்லி : டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
-
மாலத்தீவுக்கு இந்தியா ஆதரவு: அதிபர் முகமது முய்சு நன்றி
26 Jul 2025மாலி : மாலத்தீவுக்கு இந்தியா அரசு அளித்து வரும் ஆதரவுக்கும் உறுதியான நப்புக்கும் நன்றி என முகமது முய்சு கூறினார்.
-
கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்
26 Jul 2025மும்பை : நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
ஹிந்து கோவில் பிரச்னை: தாய்லாந்துடனான போரை நிறுத்த கம்போடியாவுக்கு திடீர் அழைப்பு
26 Jul 2025தாய்லாந்த் : தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கடலூர்: ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
26 Jul 2025சென்னை : கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
டி.ஆர்.எப். பிரிவுடன் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்
26 Jul 2025வாஷிங்டன், : லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது.