Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நோபல் விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய தலைவர் யார் தெரியுமா?

இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். 

3 டன் எடை கொண்டது

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மை, India Ink

சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black) புகைக்கரி (பைன் மர துண்டுகளை) எரித்து கிடைக்கப்பெற்றது), இறைச்சி கொழுப்பு (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட Gelatin Bone Clue), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும்  சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய எழுதுவதற்கான திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா 'இந்தியா இங்க்" (India Ink). சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா... மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago