முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாய்களின் திறமை

நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம். எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

‘லைவ் லொகேஷன்’

பயனாளர்களுக்கு  இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியுமாம்.

பார்வை அற்றவர்களுக்காக விரைவில் செயற்கையாக தயாரான ரோபோ கண்கள்

இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

பூமி சூரியனை சுற்றும் நாள்களை பண்டைய காலத்தில் கணக்கிட்டவர் யார் தெரியுமா?

இன்றைய நவீன அறிவியல்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நவீன அறிவியலுக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும், ஞானிகளும் இதை முறையாக கூறியதுடன், அதை கணக்கிட்டும் கூறியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் பாஸ்கர ஆச்சார்யா. கணிதவியல் அறிஞராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்த அவர் நவீன அறியவியலுக்கு முன்பாகவே பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை துல்லியமாக கணித்து சொன்னவர்.  அன்றைக்கு அவரது கணக்கீட்டின் படி, 365.258756484 நாட்கள் என தெரியவந்தது. நவீன அறிவியலில் அது 365.2564 நாள்கள் என கணக்கிடப்பட்டது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.0002 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியம் தானே.

கோகோ கோலா கிடைக்காத நாடு

உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago