முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விண்வெளி சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?

விண்வெளிக்குச் செல்வது என்பது இதுவரை நீண்டகால பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ரஸ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் என்ற விண்வெளி வீரர்தான் வொஸ்ரொக் என்ற விண்கலத்தில் முதலாவதாக புவியீர்ப்பைக் கடந்து விண்வெளி சென்று திரும்பி வந்தார். இரண்டு வருடங்களின் பின் 1963 ஆம் ஆண்டு வலன்ரீனா ரெரஸ்கோவா என்ற ரஸ்ய பெண்மணியே விண்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்மணியானார். சுமார் 60 வருடங்களுக்கு முன் இப்படியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் இன்று வளர்ச்சி அடைந்து பயிற்சி பெறாத சாதாரண பயணிகள்கூட விண்வெளிக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மற்றும் ப்ளு ஒரிஜின் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளைக் குறைந்த செலவில் கொண்டு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விண்வெளிப் பயணங்களைத் தொடர்ந்து, விரைவில் கிரகங்களுக்கான சுற்றுலாப் பயணங்களும் நடைபெற இருக்கின்றன.

சியோமி எம்ஐ டேப்லெட்

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 3 டேப்லெட் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. எம்ஐ பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும்.

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம்

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

20, 450 போராட்டங்கள்

கடந்த 2‌015-ம் ஆண்டில் தமிழகத்தில் 20,450 போராட்டங்கள் நடைபெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 2-ம் இடத்திலும்  (13,089) , உத்தராகண்ட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. (10,477). அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் அடுத்தடுத்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago