முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இந்தியாவில் வெளியான முதல் செய்தி தாள்

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் செய்தி தாள் எது தெரியுமா.. பெங்கால் கெசட் என்பதுதான். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 1780 இல் தொடங்கப்பட்டது. பெங்கால் கெசட் ஒரு வார பத்திரிக்கையாக கொல்கட்டாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதன் முகப்பில் பிரிட்டன் ஆங்கிலத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் ஆங்கிலத்தில் நேரடியாக தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் சுதந்திரமாக எழுதுவதற்கு இடம் அளித்தது. இதன் கடைசி பக்கங்களில் விளம்பரங்களும் இடம் பெற்றிருந்ததை காண முடிகிறது.

இதற்குமா ரோபோட்?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்த கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் உள்ள மென்பொருள் மூலம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவற்றை பயன்படுத்தி இறுதி சடங்கை மேற்கொள்ளலாம்.

ஆயளை அதிகரிக்க

அசைவ உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் குறையும். இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு. சூரிய உதயத்திற்கு பிறகு தூக்கம் அடிக்கடி உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். பாலியல் ஆசை அளவோடு இருத்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவையில்லாமல் டென்சன் கொண்டால், அது ஒருவரது வாழ்நாளைக் குறைக்கும்.

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago