முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

காற்றே எரிபொருள்

அழுத்தப்பட்ட காற்றினை எரிசக்தியாகக் கொண்டு இயங்கும் காரினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏர்பேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்கள் மணிக்கு 65 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லும். இந்த காரில், 200 கி.மீ. தூரம் பயணிக்க ரூ.70 மட்டுமே செலவாகும் என்பது சிறப்பம்சம்.

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா?

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

உலகில் முதன்முதலில் வைர சுரங்கம்

இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கங்களிலிருந்து வைரம் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியா வைரத்தின் மதிப்பை உணர்ந்திருந்தது. இந்தியாவில் தான் முதன் முதலில் வைர சுரங்கங்கள் காணப்பட்டன.  கிருஷ்ணா, கோதாவரி நதி படுகைகளில் உள்ள வண்டல் படுகைகளில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்குதான் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாக இன்றும் இந்தியாவில் கிடைத்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான வைரமாகும்.

கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்டது. கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மலை அளவு ஒளி என்று பொருள். இது இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகள் பழமையான இந்த வைரம் பல கைகள் மாறி 1793-ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா கைக்குப் போனது. அவரே இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்று பெயரிட்டார். அதன்பின்னர் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. வணிகம் செய்ய வந்து காலனி ஆதிக்காமாக இந்தியாவை மாற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்.ஜான் லாரன்ஸ் இதனைக் கைப்பற்றி, அதை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு பரிசளித்தார். தற்போது, கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago