முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ஸ்கார்ஃப்

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் என்ற இந்த ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.  நாம் வெளியே வரும்போது, காற்றின் மாசு எவ்வளவு, ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டுகிறது.

ரிக்சாகாரருக்கு ரூ.1 கோடி சொத்து

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

வீட்டில் காற்றை சுத்திகரிப்பு செய்யும் 6 செடிகள்

இன்றைக்கு நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது, மரூள் (snake plant)-சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் ஒன்றான மருள், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் உள்ளிட்ட குறைந்தது 107 அறியப்பட்ட காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. எந்தவொரு காலநிலையிலும் செழித்து வளரும். மணிபிளான்ட் (Money plant)-இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பீஸ் லில்லி (Peace lily)-இது ஒரு சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரம் ஆகும். இது ஃபர்னிச்சர், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றால் உருவாகும் தூசுகளையும் தன்னுடைய பெரிய இலைகளின் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும். கற்றாழை (Aloevera)-சருமம் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை தீர்வை தரவல்லது என்பது நம் மருத்துவத்தில் காலங்காலமாக இருக்கும் விஷயம். அதைத் தவிர்த்து காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். புதினா (Mint)-இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். எலுமிச்சைப்புல் (Lemon grass)-இதில் சிட்ரல் (citral) என்னும் வேதிப்பொருள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும், கிருமிநாசினியாகவும் ஓர் இயற்கை கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.

இ்ந்திய பெருஞ்சுவர் எங்கிருக்கிறது தெரியுமா?

சீன பெருஞ்சுவர் தெரியும்... அதென்ன இந்திய பெருஞ்சுவர்... உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் மலை பிரதேசத்தினுள் சூழ்ந்திருக்கும் அதன் பெயர், ‘கும்பல்கர்க் கோட்டை’. இந்தக் கோட்டை ராஜ ராணா கும்பா என்ற மன்னனால் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டைக்கு செல்லும் வழியில் அரணாக எழுந்து நிற்கும் இந்த சுவர் சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் கோட்டை வரை நீள்கிறது. மலை பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். யுனஸ்கோவின் பட்டியலிலும் இந்த சுவர் இடம் பெற்றிருக்கிறது.

ரத்த நிறத்தில் அருவி அண்டார்டிகாவில் ஓர் அதிசயம்

பெரும்பாலும் அருவி நீர் நிறமற்ற வேகத்தில் கொட்டும். சற்று அடர்த்தியாகவும், வேகமாகவும் பாய்கிற போது அதன் குமிழிகள் பொங்குவதால் வெள்ளை நிறத்தில் இருப்பதை நம்மால் காண முடியும். உலகம் முழுவதுமே அருவிகள் வெள்ளை நிறத்திலேயே பொங்கி பிரவகிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இடத்தை தவிர. அது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள விக்டோரியா நிலம் எனப்படும் McMurdo Dry Valleys என்ற பள்ளத்தாக்கில்தான் அருவி ரத்த நிறத்தில் பாய்ந்தோடுகிறது. இந்த ரத்த நதி டெய்லர் பனிப்பாறையின் நாக்கு போன்ற பகுதியிலிருந்து டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள வெஸ்ட் லேக் போனியின் பனி மூடிய மேற்பரப்பில் பாய்கிறது. ஏன் சிவப்பாக, ரத்த நிறத்தில் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பூமியில் உள்ள இரும்பு ஆக்சைடு இந்த நீர் பரப்பில் கலந்து வருவதால் சிவப்பு நிறத்தில பாய்கிறது பனிக்காலங்களில் சிவப்பு நிற பனிப்பாளங்களாக உறைந்து கிடப்பதை பார்க்க பேரதிசயமாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago