முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

தேங்காய் துருவுவது ஈஸி...

சமையல் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.. எது கடினமானது என்றால்... தேங்காயை உடைத்து சில்லை எடுத்து மிக்ஸியில் போட்டு துருவுவது.. அல்லது கேரட் சீவலால் சீவி.. மிக்ஸியில் போட்டு அரைப்பது.. தண்ணீர் ஊற்றவில்லை என்றால் மிக்ஸியில் தேங்காய் சரியாக அரையாது.. இதனால் துருவல் பதத்துக்கு எடுக்க முடியாது.. இனி அந்த கவலை எல்லாம் வேண்டாம்.. சந்தைக்கு வந்துள்ளது table top wet grinder coconut scraper அது என்னங்க.. புதுசா இருக்கு.. அதான்... கிரைண்டரில் பொருத்தி தேங்காயை துருவும் கருவி.. டேபிள் டாப் கிரைண்டரில் அதை பொருத்த வேண்டியது..தேங்காய் மூடியை வைத்து.. சுவிட்சை இயக்கினால்.. பூ மாதிரி தேங்காய் துருவல் ரெடி.. என்ன இல்லத்தரசிகளே.. இல்லத்தரசர்களே.. தேங்காய் துருவ ரெடியா... அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது..பாருங்க.. வாங்குங்க.. ஜாலியா துருவுங்க... இந்த பண்டிகை காலத்தில் தேங்காய் பர்பி செய்து உண்டு மகிழுங்கள்..

கோகோ கோலா கிடைக்காத நாடு

உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.

எய்ட்ஸ் நோய்

உலகம் முழுவதும் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கும் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

திப்பு சுல்தான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி

இன்றைக்கு செயற்கை கோள்களை சுமந்த படி விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகளை நாம் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். அதே போல ராணுவத்தினரின் போர் பயிற்சியின் போதும் ராக்கெட் வடிவிலான ஏவுகணைகளை கண்டிருப்போம். ராக்கெட், ஏவுகணை இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியவைதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 18 ஆம் நூற்றாண்டுவரை அனைத்து நாடுகளிலும் ராக்கெட்டுகள் மரம் அல்லது மூங்கிலை கொண்டே தயாரிக்கப்பட்டன. உலகிலேயே முதன் முதலாக உலோகத்தினாலான ராக்கெட்டை செய்தவன் திப்பு சுல்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குண்டூர் யுத்தத்தின் போது ஆங்கில படைகளை உலோக ராக்கெட்டுகளை பயன்படுத்தி தெறிக்க விட்டான். அவன் உருவாக்கிய ராக்கெட்டுகள் 20 செமீ நீளம் 8 செமீ விட்டமும் கொண்டவையாக சுமார் 3 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக விளங்கின. அன்றைய கால கட்டத்தில் மிக தொலை தூரம் சென்று தாக்கும் ராக்கெட் திப்புவினுடையது மட்டும்தான் என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே..

சீன புல்லெட் ரயில்

சீனாவில், ஃப்யூக்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் உள்ள, சுமார் 1,318 கி.மீ. கொண்ட பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த தூரத்தை புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறபம்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago