நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.
நாம் தற்போது, உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து, அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளோம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். கோழி இறைச்சி, கீரை உணவு வகைககள், முட்டை, காளான் உணவுகள், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், பீட்ரூட் உணவு போன்றவைகள் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள் ஆகும்.
இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசுதான் உலகிலேயே மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. அதில் அதிகமான விருதுகளை குவித்த நாடு பிரான்ஸ். 1901 முதல் 15 பேர் இலக்கியத்துக்காக இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர். அந்த ஆண்டில் முதன்முறையாக நோபல் பரிசு பெற்று சாதனை பட்டியலை தொடங்கி வைத்தவர் பிரெஞ்சு கவிஞர் Sully Prudhomme. அவரை தொடர்ந்து ரெனே தெகார்த்தே, வால்டேர், சார்லஸ் பொதேலர் என பலர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.
கவலையால் அவதிப்படுபவர்களுக்கு ஜெயிஷ்டிகாசனம் நல்ல பலனைத்தரும். மேலும், இதை தொடர்ந்து செய்து வந்தால், தொப்பை குறையும். மன இறுக்கத்தை போக்குகிறது. முதுகு தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது. உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியை தரும் ஆசனம் இது.
சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


