அசைவ உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் குறையும். இரவு நேரத்தில் தயிரை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு. சூரிய உதயத்திற்கு பிறகு தூக்கம் அடிக்கடி உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். பாலியல் ஆசை அளவோடு இருத்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவையில்லாமல் டென்சன் கொண்டால், அது ஒருவரது வாழ்நாளைக் குறைக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.
சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.
வவ்வால்கள் குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக எகிப்து நாட்டு வவ்வால்கள் காதலுக்காக பழங்களை பரிசாக பெறுவது தெரியவந்துள்ளது. பெண் வவ்வால்கள் தங்களது காதலின் போது ஆண் வவ்வால்களின் வாயிலிருந்து பழங்களை கவ்வி எடுத்து உண்ணும் என்பை இஸ்ரேல் நாட்டு டெல் அவிவ் பல்கலை கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது.
முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர் 2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


