முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூலம்,வெளிமூலம்,உள்மூலம்,பவுத்திரம் | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Cure Piles

siddha-3

 

  1. உள்மூலம்;-- காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
  2. பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க;--பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து ஊற வைத்து பூடை மென்று தின்று வரலாம்.
  3. மூலம் குணமாக;--புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம்.
  4. இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தலைத் தவிர்த்தல் ;-- சூடு,மூலம் வராமல் தடுக்கலாம்.
  5. வாத நோய்,மூல நோய்,இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை;--பலாப்பழம்.
  6. மூலப்புண் ;-- மஞ்சள் பொடி கலந்து சுடு நீரில் ஆசன வாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும் மூல வலி குறையும்.
  7. பவுத்திரம் தீர ;-- குப்பைமேனி சமூலத்தை பொடிசெய்து 2 சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
  8. மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய;--கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம்.
  9. மூலம் தீர;-- நாயுருவி விதைப்பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும்.
  10. மூலநோய் குணமாக ;--பப்பாளிப்பழம்,மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
  11. மூல நோய் நீங்க;--துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாள் நாட்கள் சாப்பிட்டு வரவும்.(மாமிசம்,புளி,காரம் சேர்க்க கூடாது)
  12. ஆசனம் வெளித்தள்ளல் தீர ;-- பழம்பாசி இலையை பொடி செய்துபாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
  13. வெளிமூலம் தீர ;--கொய்யா வேரை கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம்.
  14. உள்மூலம் பவுத்திரம்.தீர ;-- பொடுதலை உளுந்தம் பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம்.
  15. மூலக்கடுப்பு தீர ;-- சுண்டைக்காய்யை சமைத்து சாப்பிடலாம்.
  16. மூலக்கடுப்பு,எரிச்சல்  தீர ;-- இரண்டு  கட்டுக்கொடி இலையை மென்று தின்று வரலாம்.
  17. மூலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.
  18. மூலம்,இரத்தப்போக்கு நிற்க ;-- குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி,
  19. ஒரு கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து,ஒரு வேளை சாப்பிடவும்.
  20. இரத்த மூலம் குணமாக;--அருகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரவும்.
  21. இரத்த மூலம் தீர ;-- துத்தி இலையை விளக்கெண்ணையில் இளம் சூட்டில் வதக்கி கட்டி வரலாம்.
  22. மூல ரணம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர மூல ரணம் தீரும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago