எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
மக்களவை துணைசபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை வருமாறு: அதிமுக தமிழக மக்களின் உயர்வுக்காகவும் மேன்மைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம். இது தான் அண்ணா கண்ட உண்மையான திராவிட இயக்கம். தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுதங்களை வாழ்விக்க வந்த மகானாக எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டனர். எல்லையில்லா வண்ணம் தன்னை நேசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் மக்களுக்காக உருவாக்கிய இயக்கம் அதிமுக அன்று முதல் இன்று வரை இனிவரும் காலங்களுக்கும் மக்களால் அதிமுக மக்களுக்காக அதிமுக என்பது தான் வரலாறு . இத்தனை சிறப்பு வாய்ந்த இயக்கத்தை தனக்கு பிறகு வழிநடத்த எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா மக்களுக்கால் நான். மக்களுக்காக நான். என்பதே அம்மாவின் தாரக மந்திரம், சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர் காட்டிய புனிதப்பாதையில் வாழ்ந்த அம்மா இன்று நம்மிடையே இல்லாத சூழலில் அதிமுக சிறப்புற வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் ஒருங்கே அமைய பெற்றவர் சின்னம்மா மட்டுமே.
அகில இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக முதல்வர் ஜெயலலிதா,உருவாக்கப்பட்ட அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சின்னம்மா திகழ்கிறார்கள், கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு நெருங்கி பழகி அவரோடே வாழ்ந்து அவர்களுக்காக எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சின்னம்மா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று கொடுமைகளுக்கு ஆளானவர், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்திலிருந்தும் அவரை காப்பாற்றியவர், கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நடத்துவதிலும் அரிய ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாய் நின்றவர் என்று சின்னம்மாவின் சிறப்பு இயல்புகளை ஏராளமாக பட்டியலிடலாம்.
தேர்தல் பணிகளிலும் கழகம் முக்கிய முடிவுகளை எடுக்க நேர்ந்த தருணங்களிலும் தன்னுடைய எண்ண ஓட்டங்களையும் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகளையும் அறிந்து கொள்ள என்னை போன்ற கழக நிர்வாகிகளை ஜெயலலிதா,சி்ன்னம்மாவின் ஆலோசனைகளை பெற்றுசெயல்படுமாறு பணித்திருக்கிறார்கள் . அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் என்று முறையில் என்னுடைய பணிகளுக்கு அரிய பல வழிகாட்டுதல்களையும் சின்னம்மா அளி்த்திருக்கிறார்கள்., பல்வேறு சோதனைகளையும் சரித்திர நிகழ்வுகளையும் ஜெயலலிதாவோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்ட சின்னம்மா அதிமுகவை வழிநடத்த தேவையான தலைமைப்பண்புகள் நிறைந்தவர்.
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். அம்மா அவர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சின்னம்மா ஒருவர் மட்டுமே அம்மா வாழ்ந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்இருந்தே ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்க தொடங்கிய நாளில் இருந்தே அவர்களுக்கு துணையாக இருந்து செயல்பட்டவரை அனைவரும் சி்ன்னம்மா என்று அழைக்கத்தொடங்கினோம். அப்படி அழைப்பதை அம்மாவும் ஏற்று அங்கீகரித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே சின்னம்மாவே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பது அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்கு அறிந்த ஒன்றாகும். என்னை போன்ற அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என நன்றிப்பெருக்கோடும், நல்லெண்ண வாழ்த்துக்களோடும் கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை
08 May 2025சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.