எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சப்போட்டாப் பழம் பழுப்பு நிறத்தில் உருளைக் கிழங்கு வடிவில் காணப் படும். சப்போட்டா காயாக இருக்கும் போது சாப்பிட முடியாது. நன்கு பழுத்த பிறகே சாப்பிட முடியும். உள்ளே அவரை விதைபோல் கறுப்பு நிற விதைகள் இருக்கும். அவற்றை நீக்கி விட்டுச் சாப்பிட வேண்டும். அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும் இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.
நல்ல எனர்ஜியை கொடுக்கக் கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா விளங்குகிறது. 100 கிராம் சப்போட்டாவிலே 83 கிராம் கலோரி சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின்கள், தாது பொருட்கள், அமினோ அமிலங்கள் இவற்றுடன் ஆல்கலாய்டுகளையும் சப்போட்டா பெற்றிருக்கிறது.
சத்தான பழம் என்று தான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டாப் பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
100 கிராம் சப்போட்டாப் பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லி கிராம் பாஸ்பரசும் உள்ளது. சப்போட்டா அதிக மருத்துவ குணமும் எளிமையாக அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். கலோரிகள் நிறைந்தது. கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது.
தினமும் இரண்டு சப்போட்டாப் பழம் சாப் பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவடையும். சருமம் பளபளப்பாகும். சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டாப் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இரண்டு பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
சப்போட்டா பழத்தில் டேனிப் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருள் அதிகம் காணப்படுகிறது. இது நோய் தடுப்பு பொருளாக செயல்படுகிறது. உடலில் புற்று நோய்களை உருவாக்கக் கூடிய நச்சு கழிவுகளை நீக்கக் கூடியதாகவும் இது விளங்குகிறது. மேலும் நோய் கிருமிகளை உடலை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும் சப்போட்டா பழத்திற்கு உள்ளது.
வயதான காலத்திலும், பார்வை மேம்படுத்தப்படும் குளுக்கோஸ் அதிக அளவு உள்ளதால் உடலுக்கு அதிக ஆற்றலைக் தருகிறது. உடல் அலர்ஜியை எதிர்க்கும் திறன் கொண்டது. உணவுக் குழாயை சுழற்சி சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலுக்கு தீர்வு காண்கின்றது. குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கும். பளபளக்கும் கூந்தலுக்கும், பொடுகு தொல்லை, முடி உதிர்வதை தடுக்கும், எலும்பை ஆரோக்கியமாக்க உதவும், நார்ச்சத்து அதிகமுள்ளதால் சிறந்த மலமிலக்கி, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சிறந்தது.
இரத்த இலப்பை நிறுத்தும் குணம் கொண்டது. மூல வியாதி காயங்களால் ஏற்படும் இரத்த போக்கிற்கு பெரும் உதவி புரிகிறது. ஒருவித மயக்க தன்மை கொண்டதால், மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்புகளை சுமையடைய செய்யும். வைட்டமின் இ சத்துள்ளதால் சருமம் பளபளக்கும். சப்போட்டா விதையின் எண்ணை தலைமுடி உதிர்வதை தடுக்கும். ஆண்டி ஆக்சிடன்ட் அதிக அளவு உள்ளதால் சருமத்தின் சுருக்கங்கள் மறையும்.
சப்போட்டாவில் கால்சியச்சத்து அதிகமாக இருப்பதால் அதைச் சாப்பிட் டால் உடல் வலிமை பெறும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சப்போட்டாப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். அப்போது நோயின் கடுமை கட்டுப்பட்டு அதிகத் தொந்தரவு ஏற் படாது. தொண்டைப்புண், வறட்டு இருமல், நாக்கு வறட்சி போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் காலையிலும், மாலையிலும் சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.
சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால் அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் சப்போட்டாப் பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. சப்போட்டா ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜென்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் செரிமானப் பாதையை சரிசெய்வதன் மூலம் அது உணவுக் குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. வைட்டமின்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது.
மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. இத்தகைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்து காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது. சப்போட்டாப் பழத்தில் நார்ச்சத்து (5.6ஃ100 கிராம்) அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மல மிளக்கியாகக் கருதப்படு கிறது.
மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து குடலை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டாப் பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறி குறிகளைக் குறைப்பதில் உதவுகிறது. சப்போட்டாவின் மூலிகையானது ரத்த இழப்பை நிறுத்தும். அதாவது அதன் கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளவை என்று அறியப்படுகிறது.
பாலிஃபீனாலிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஓட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது.
மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியா சின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறை யின் செயல்பாட்டை அதிகரித்து அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் ‘சி’ தீங்கு விளைவிக்கும் தீவிரப் போக்கினையும் அழிக்கிறது. சப்போட்டா அதன் வயிற்றுப் போக்குக்கான மருந்துப் பண்பினால் வயிற்றோட் டத்தை நிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அதற்கு நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த முடியும்.
மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக் கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது. சப்போட்டாப் பழத்தைச் சாப்பிடுவதால், மார்புகளில் சளித் தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவா சக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இரும லுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
சப்போட்டாப் பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளைத் தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படு கின்றன. இதனால் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது. சப்போட்டாப் பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது. மற்றும் இரைப்பையில் தொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது. சப்போட்டாப் பழம் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக விளங்குகிறது.
இதனால் அடிக்கடி சிறுநீர் மூலம் உடலிலிருந்துக் கழிவுப் பொருட்களை அகற்ற ஒரு சிறந்த நீர்ப் பெருக்கியாக செயல்படுத்த உதவுகிறது. சப்போட்டாப் பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம். சப்போட்டாப் பழத்தை சாப்பிடுவதால் சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை
08 May 2025சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் - சச்சின் வரவேற்பு
08 May 2025ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம்.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அரியலூர் மாவட்டம் முதலிடம்
08 May 2025சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
-
ரூ.2 ஆயிரம் கோடி பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
08 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏ
-
பாக். தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி
08 May 2025ஸ்ரீநகர், பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
-
பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு
08 May 2025புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
மாணவர்களுக்கு ஆளுமைமிக்க நாற்காலி காத்து கொண்டிக்கிறது அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
08 May 2025சென்னை: மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவை பேச்சை முழுமையாக வெளியிட்டால் தி.மு.க. ஆட்சி பாதாளத்துக்கு போய்விடும் - இ.பி.எஸ்
08 May 2025சேலம்: சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு
08 May 2025புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை நேற்று (மே 8) இந
-
டெல்லியே திரும்பிப் பார்க்கும் அளவில் நம்முடைய மாதிரிப்பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
08 May 2025திருச்சி: டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
08 May 2025சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ் பாரதி பதில் அளித்துள்ளார்.