முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலுக்கு கண்ணில் கோளாறு: செல்லூர் ராஜூ விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், 21-ம் தேதியான இன்று கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். இப்படி இருக்க தி.மு.க தலைவர் கருணாநிதியினைச் சென்று சந்திப்பது என்றால் கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது. - அமைச்சர் செல்லூர் ராஜூ

இதற்கு முன்னோட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை தி.மு.க. தலைவர் கருணாநிதியினைச் சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துப் பெற்றார். தி.மு.க. தலைவர் கருணாநிதி - கமல் சந்திப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ  விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட பொழுது அவர் கூறியதாவது,

நாங்கள் ஊழல் செய்கிறோம் என்று கமல் தெரிவித்துள்ளார். ஆனால் ஊழலின் மொத்த உருவமாக விளங்குவதே தி.மு.க.தான். இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். 1976-இல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் தி.மு.கவின் ஊழல் பற்றித் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தி.மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இப்படி இருக்க தி.மு.க தலைவர் கருணாநிதியினைச் சென்று சந்திப்பது என்றால் கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்றுதான் அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து