எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், மீன்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளத்துறை சார்பில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி மூலம் தமிழகத்தின் மீன் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று 16.2.2018 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தரமான தொழிற் கல்வியை வழங்குதல், மீன்வள அறிவியலில் உள்ள முதன்மையான பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மீன்வளர்ப்போர், மீனவர், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மீன்வள இணை தொழிற் கல்வியை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் 4.78 ஏக்கர் நிலப்பரப்பில் 44,800 சதுர கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வரவேற்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கணிணி ஆய்வகம், கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடம், நாகப்பட்டினம், வட்டார் நதிக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 இருக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கருத்தரங்கக் கூடம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், அரியமானில் 3.46 ஹெக்டேர் நிலப்பரப்பில், 12,000 சதுரடி பரப்பளவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்நுட்பப் பயிற்சி நிலையக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், வாணியஞ்சாவடியில், தமிழ்நாடு மீன்வள முதுகலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் 3 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பாக் வளைகுடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பாக் வளைகுடா பகுதியிலுள்ள 2000 இழுவலைப் படகுகளுக்கு பதிலாக புதிதாக ஆழ்கடல் தூண்டில் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் இத்திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி, மத்திய அரசு பங்குத் தொகையுடன் 286 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு படகின் விலையான 80 லட்சம் ரூபாயில், 50 சதவிகிதம் மத்திய அரசின் மானிய உதவியுடனும், 20 சதவிகிதம் மாநில அரசு நிதியுதவியுடனும், 10 சதவிகிதம் பயனாளியின் பங்களிப்புடனும், மீதமுள்ள 20 சதவிகிதத் தொகை வங்கி கடனுதவி மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவ பயனாளிகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களால் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டம் செயலில் இருந்தாலும், அதற்கான உட்கட்டமைப்பு, ரோந்து கலன்கள், மனித ஆற்றல் போன்றவை போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால், கடலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி, சட்டத்திற்கு முரணான மீன்பிடிப்பை தடுத்தல், மீன்வள ஆதாரத்தை பாதுகாத்தல், மீன்பிடிப்பை முறைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவதில் பெரும் தடைகள் உள்ளன. இத்தடைகளை களையும் வகையில், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல்துறை ஆய்வாளர்கள், 8 காவல்துறை சார் ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 17 காவல்துறை ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, மீன்வளத்துறைக்கென தனியே கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்தம் பதவிக்கான சீருடையுடன், வலது மேற்கையில் இப்பிரிவிற்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை அணிவார்கள்.
அதன்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் கொடியை காவல் துணை கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.