எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், மீன்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளத்துறை சார்பில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி மூலம் தமிழகத்தின் மீன் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று 16.2.2018 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தரமான தொழிற் கல்வியை வழங்குதல், மீன்வள அறிவியலில் உள்ள முதன்மையான பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மீன்வளர்ப்போர், மீனவர், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மீன்வள இணை தொழிற் கல்வியை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் 4.78 ஏக்கர் நிலப்பரப்பில் 44,800 சதுர கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வரவேற்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கணிணி ஆய்வகம், கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடம், நாகப்பட்டினம், வட்டார் நதிக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 இருக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கருத்தரங்கக் கூடம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், அரியமானில் 3.46 ஹெக்டேர் நிலப்பரப்பில், 12,000 சதுரடி பரப்பளவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்நுட்பப் பயிற்சி நிலையக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், வாணியஞ்சாவடியில், தமிழ்நாடு மீன்வள முதுகலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் 3 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பாக் வளைகுடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பாக் வளைகுடா பகுதியிலுள்ள 2000 இழுவலைப் படகுகளுக்கு பதிலாக புதிதாக ஆழ்கடல் தூண்டில் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் இத்திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி, மத்திய அரசு பங்குத் தொகையுடன் 286 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு படகின் விலையான 80 லட்சம் ரூபாயில், 50 சதவிகிதம் மத்திய அரசின் மானிய உதவியுடனும், 20 சதவிகிதம் மாநில அரசு நிதியுதவியுடனும், 10 சதவிகிதம் பயனாளியின் பங்களிப்புடனும், மீதமுள்ள 20 சதவிகிதத் தொகை வங்கி கடனுதவி மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவ பயனாளிகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களால் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டம் செயலில் இருந்தாலும், அதற்கான உட்கட்டமைப்பு, ரோந்து கலன்கள், மனித ஆற்றல் போன்றவை போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால், கடலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி, சட்டத்திற்கு முரணான மீன்பிடிப்பை தடுத்தல், மீன்வள ஆதாரத்தை பாதுகாத்தல், மீன்பிடிப்பை முறைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவதில் பெரும் தடைகள் உள்ளன. இத்தடைகளை களையும் வகையில், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல்துறை ஆய்வாளர்கள், 8 காவல்துறை சார் ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 17 காவல்துறை ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, மீன்வளத்துறைக்கென தனியே கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்தம் பதவிக்கான சீருடையுடன், வலது மேற்கையில் இப்பிரிவிற்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை அணிவார்கள்.
அதன்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் கொடியை காவல் துணை கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.