முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பாதுகாப்பு நிறைந்தது: பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பாதுகாப்பு நிறைந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய எரிபொருள் அமைப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் எரிபொருள் தேவை வரும் காலங்களில் இரட்டிப்பாகும். நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டால் குறிப்பிடத்தக்க அளவில் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டல் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது.  பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் எரிபொருள் தேவையும் அதிகரிக்கும்.

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது. எரிசக்தி நுகர்வை இரண்டு மடங்காக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக நலனை கருத்தில் கொண்டே இந்தியா எப்போதும் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து