முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி - உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் நாளை 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர். 

டெல்லி, அரியானா போலீசார் டிராக்டர் பேரணிக்கான முதற்கட்ட அனுமதி வழங்கி இருப்பதாக  விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் டெல்லியில் அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே உத்தரப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பல இடங்களில் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என்று அந்த மாநில அரசுகள் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது. பல பெட்ரோல் பங்குகளில் நேற்று முன்தினம் முதல் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து