எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினால் தி.மு.க. அழிந்தது என்ற வரலாறு நிச்சயம் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதிபட கூறினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, கழக பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது :
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவித்த போதே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். ஆகவே பிறக்கும்போதே வெற்றி என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிய ஒரு இயக்கம் நமது இயக்கம். இன்றைக்கு இந்த நான்கு ஆண்டுகள் அல்ல இனிவரும் நூறு ஆண்டு காலமும் அ.தி.மு.க. தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மக்கள் சேவையாற்றும் என்று வரலாறு படைக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார் நமது முதலமைச்சர். அதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.
இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு நாளும் திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை முதலமைச்சர் உயர்த்தியுள்ளார் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியும், மக்களின் எண்ணங்களை அறிந்து நலத்திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கு முன்னோடியாக நமது முதலமைச்சர் திகழ்கிறார்.
முன்பெல்லாம் ஏழைக் குடும்பங்களில் திருமணம் என்றால் மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் வைத்து திருமணம் செய்வார்கள். அந்த நிலையை மாற்றி தாலிக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கிய அம்மா, அதனை தொடர்ந்து 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்றைக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில்கூட இத்திட்டம் கிடையாது. விவசாய மக்களுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் 17,428 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இதன் மூலம் 33.43 லட்சம் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அரசு அம்மா அரசாங்கும்.
உழைக்கும் பெண்களுக்கு இது வரை மானிய விலையில் 2,85,000 இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 80 ஆயிரம் கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 67 லட்சம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய தொகை 500 ரூபாய்தான் வழங்கப்பட்டது.
இதற்காக 1,200 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் 1,000 ரூபாயாக உயர்த்தி கூடுதலாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தற்போது கூடுதலாக 5 லட்சம் பேர் பயன்படும்வகையில் அறிவித்து அதன்படி வழங்கப் பட்டு வருகிறது. தற்போது இதற்காக ஒதுக்கப்படும் தொகை 4,800 கோடி ரூபாயாகும்.
தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அம்மா அரசின் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக மனுக்களை வாங்கி பெட்டியில் வைத்து பூட்டு போட்டுக்கொண்டு அறிவாலயத்துக்கு கொண்டு செல்கிறார். பொதுவாக மனு வாங்கினால் அதை படித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் அந்த மனுக்களை கணினியில் ஏற்றி வைக்க வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை ஆகும்.
ஸ்டாலின் ஒருபோதும் பதவிக்கு வரப் போவதுமில்லை. அந்த பெட்டியை திறக்க போவதுமில்லை. ஏனென்றால் தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போடுவதில்லை. அதுமட்டுமில்லாது இன்றைக்கு மக்களின் குறைகளை தீர்ப்பதில் முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்மையாக திகழ்கிறார். 234 தொகுதியிலும் மக்களின் குறைகளை முதலமைச்சர் போக்கி வருகிறார். மக்களைத் தேடி அரசு என்பது ஒருபுறம் இருந்தாலும் இன்றைக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரசாக அம்மா அரசு உள்ளது.
நமது வெற்றியை தடுக்க தி.மு.க.வினர் பல தில்லு முல்லுகளை செய்வார்கள். அதையெல்லாம் நீங்கள் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனென்றால் இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு கிடையாது. ரவுடியிசம் கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் தடையின்றி மக்கள் இடத்தில் சேர்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள் எப்படி அனைத்து தர மக்களுக்கும் காவல் அரணாக அம்மா அரசு திகழ்கிறது என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர்.
வில்வ இலை நோயைத் தீர்க்கும், வேப்பிலை பில்லி சூனியத்தை போக்கும், ஆனால் இரட்டை இலை மக்களின் அனைத்து குறைகளையும் போக்கும். ஆகவே வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க. டெபாசிட் இழந்து இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அழிந்த வரலாறு ஸ்டாலினால் நிச்சயம் உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


