எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என்று முதன்முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், ஸ்டெர்லைட் ஆலையில் பிராணவாயு பிரிவை மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பது தொடர்பாக நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு-
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் ஏற்பட்டவுடன் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் எந்த அளவுக்கு கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை சுருக்கமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன் அம்மாவின் அரசு முன்னேற்பாடாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டது. மருந்துகள் கொள்முதல், மருத்துவ உபகரணங்களான சூ-95 முகக்கவசங்கள், மூன்று மடிப்பு முகக்கவசங்கள், முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கு பணியாணை வழங்கப்பட்டு, தேவையான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, நாம் கையிருப்பில் வைத்திருக்கின்றோம். அதேபோல, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நோய் பரவலை கண்டறிவதற்காக இவையெல்லாம் முன்னேற்பாடாக செய்யப்பட்டது. எனது தலைமையில் 14 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டு, அவ்வப்போது தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 15 முறை எனது தலைமையில் மருத்துவ வல்லுநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் நேரடியாக நடத்தப்பட்டன. அதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தலைமைச் செயலாளர் அவர்கள் தக்க அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அதுமட்டுமல்லாமல், நானே நேரடியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நேரடியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதோடு, அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக பத்திரிகை, தொலைகாட்சி மற்றும் ஒலி பெருக்கியின் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தளர்வுகளுடன் பொதுமுடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகப்படியான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 2 கோடியே 18 இலட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவல் கடந்த காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, இதர நோயுள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து கொடுத்து கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் அதிகமாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த காய்ச்சல் முகாமில் அதிக அளவில் மக்களை கலந்துகொள்ளச் செய்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனையில் நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டு, அதனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். உயிர் காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப்பணியாளர்களை நியமித்து நோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தன் மூலம் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என முதன்முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, இதுவரை 52 இலட்சத்து 61 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அறிவித்து, முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா நோய்த தொற்று கடந்த மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பல வட மாநிலங்களில் அதிகரித்த நிலையில் காணப்பட்டு வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலும் நோய்த் தொற்று படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 450 என கண்டறியப்பட்ட தொற்று நோய், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து இன்றையதினம் சுமார் 15,000 நபர்கள் அளவுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று கூடுதலாக உள்ளது. பெருகிவரும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதாரம் அதிகளவில் பாதிக்காதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2020-ல் இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 முதல் அலையின்போது தமிழ்நாடு அரசு எடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக நோய்த் தொற்று தமிழகத்தில் படிப்படியாக குறைந்து, இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரிக்கவும், கோவிட் படுக்கைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை பெருமளவில் அதிகரிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. சில மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இல்லையென்றாலும், இப்போது நாள்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம். இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய்த் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ உட்கட்டமைப்புகளை, குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாரதப் பிரதமர் அவர்களுக்கு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மருத்துவ பிராண வாயுவை தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றேன். இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா தாமிர உருக்காலை நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்து, தற்போது உச்சநீதிமன்றத்தில், அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை கீழ்க்காணும் வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும்; கொரோனா தாக்கத்தினால், தேவைப்படும் பிராணவாயுவை தங்களது இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்திலிருந்து நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள பிராணவாயுவை 1050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கோவிட்-19 சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்திலுள்ள இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது
4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையிலுள்ள பிராணவாயு உற்பத்தி செய்து தர முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில், 22.4.2021 மற்றும் 23.4.2021 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது, தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். இது குறித்து முதலில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் சில விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, இங்கு பங்கேற்றுள்ள அனைத்து கட்சிகளினுடைய நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை சுருக்கமாக தெளிவுபடுத்தலாம். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை, அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இருந்தாலும், இன்னும் அனைத்துக் கட்சிகளுடைய கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றுதான் அரசு எண்ணியது. ஆனால், இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், அனைத்து கட்சிகளையும் அழைக்க இயலவில்லை. இருந்தாலும், முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து தங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி
18 Dec 2025மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூ
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.


