முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி : கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. அங்கு தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் குடும் பத்தையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களின் சேவையைபாராட்டும் விதமாக, மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து