முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி : கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. அங்கு தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் குடும் பத்தையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களின் சேவையைபாராட்டும் விதமாக, மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து