முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க முதல்வராக மம்தா 3-வது முறையாக பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மேற்கு வங்க முதல்வராக 3- வது முறையாக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு, மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்வராக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், மேற்கு வங்க மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா தீதிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பதவியேற்பு விழாவின் போது முதல்வர் மம்தாவிடம் கவர்னர் ஜெகதீப் தங்கர் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மம்தா ஜி-யை வாழ்த்துகிறேன். சமுதாயத்தை பெருமளவில் பாதித்த இந்த விவேகமற்ற வன்முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை. அவசர சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து