முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 சதவீத இருக்கைகளுடன் மாநகர பஸ்கள் இன்று முதல் இயங்கும் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

புதன்கிழமை, 5 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாநகர பஸ்கள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

புதிய கட்டுப்பாட்டில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கம், பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும்  என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும். 

பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து