முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மரபணு ஆய்வகத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை: தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு ஆய்வகத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்று  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரே நாளில் 6 லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டது. இதுவே இதுவரை சாதனையாக உள்ளது.  அதை மிஞ்சும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 959 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 62,650 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 58,608 பேருக்கு தடுப்பூசி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மாறுபட்ட வைரஸ் தொற்றை உறுதி செய்ய இந்தியாவில் பெங்களூரு உள்பட 23 இடங்களில் மரபியல் அணு ஆய்வகம் உள்ளது. 

தமிழகத்தில் மாறுபட்ட வைரசால் 10 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மரபணுக்கள் பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள இன்ஸ்டம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஒரு மாதிரிக்கு ரூ.4 ஆயிரம் செலவு ஆவதுடன் முடிவு தெரிவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 தொழில் நுட்ப ஆய்வாளர்களை பெங்களூரு ஆய்வகத்திற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பயிற்சி முடிந்து திரும்பி வந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கூடுதல் வசதிகளுடன் ரூ.4 கோடி மதிப்பில் சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் புதிதாக மரபியல் அணு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை  அதனை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.  இந்த ஆய்வகம் மூலம் டெல்டா பிளஸ் உள்ளிட்ட மாறுபட்ட வைரஸ் தொற்று குறித்து ஓரிரு நாளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், சேலத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன்,

 இது போன்ற நிலைகள் வரவே கூடாது என்று எண்ணிதான் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராக முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. 

தி.மு.க. அரசு மாணவர்களின் நலன் காக்கும் அரசு. எனவே மாணவர்கள் மனம் தளரக்கூடாது. அவர்கள் தவறாக, உயிர்களை மாய்க்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. குறுகிய காலம் இருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து