முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் தலிபான்களால் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

 

இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ம் தேதி நுழைந்த தலிபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது சிறுமியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து