எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : டி-20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என வரலாற்றை இந்தியா மீண்டும் தொடருமா என ரசிகா்கள் எதிர்நோக்கி உள்ளனா்.
அனல் பறக்கும்...
அரசியல் வட்டாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் தொடா்ந்து பகைமை பாராட்டி வரும் நிலையில், விளையாட்டுத் துறையிலும் அந்த நிலை எதிரொலித்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று விடும். இரு அணிகளுக்கும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றன.
மான்செஸ்டரில்...
இந்நிலையில் கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன. இதில் இந்தியா வென்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் சூப்பா் 12 சுற்றில் தங்கள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதால் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் கடும் சவால் உள்ளது.
3-ம் வரிசையில்...
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை ஈட்டும் திறனுடையது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடக்க பேட்டராக களமிறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரா் கேஎல். ராகுல் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடியது, அந்த முடிவை மாற்றி விட்டது. இதனால் விராட் கோலி, மூன்றாம் வரிசை பேட்டராக களமிறங்குகிறார்.
அஸ்வின் - ஜடேஜா...
ரோஹித் சா்மா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்குகிறார்கள். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோர் பார்மில் உள்ளனா். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சஹார், புவனேஷ்வா் குமார், முகமது ஷமி, சா்துல் தாக்கூா் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், வருண் சக்கரவா்த்தி, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுப்பா்.
கூடுதல் பலம்...
கேப்டன் விராட் கோலியின் பார்ம் சற்று கவலை தருவதாக உள்ளது. அவா் கூடுதல் ரன்களை சோ்க்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். மேலும் ஆல்ரவுண்டா் ஹர்த்திக் பாண்டியா வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் கூடுதல் பலமாகும். இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் உள்ளது. அதே நேரம், இந்திய வீரா்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே ஐ.பி.எல் தொடரில் ஆடிய அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
போதிய பயிற்சி...
அதே நேரம் பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் களம் காண்கிறது. உள்நாட்டில் நடைபெறுவதாக இருந்த தொடா்கள் ரத்தானதால், பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் அணி நிர்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சீரானது. தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட ஷோயிப் மாலிக், சா்ப்ராஸ் அகமது, ஹைதா் அலி, பாக்கா் ஸமான் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டனா்.இந்திய அணிக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆடவில்லை.
13 முறை மோதல்...
தற்போது தான் ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் ஆட உள்ளனா் பாக். வீரா்கள். இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பைகளில் இதுவரை 13 முறை மோதியதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணியே வெற்றிவாகை சூடி உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இரு தரப்பும் 5 முறை மோதியுள்ளன. இந்தியாவே அனைத்திலும் வென்றது. முதல் மோதலில் பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஜோஹன்னஸ்பா்க்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 2012-இல் 8 விக்கெட், 2014-இல் 7 விக்கெட், 2016-இல் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
21-ல் இந்தியா வெற்றி...
2007-இல் இந்தியா சாம்பியன் ஆனது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் பட்டம் வெல்லவில்லை. மொத்தம் 33 ஆட்டங்களில் 21-இல் இந்தியா வென்றுள்ளது. 11 தோல்வியும், 1 ஆட்டத்தில் முடிவில்லை. 2009-இல் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. 34 ஆட்டங்களில் 19-இல் வெற்றியும், 15-இல் தோல்வியும் கண்டது. 2016-இல் அரையிறுதிக்கு கூட பாக். அணி தகுதி பெறவில்லை. ஆனால் டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சரியாக கணிக்க முடியாது. இந்திய-பாக். அணிகள் சமபலத்துடனேயே உள்ளது. எனினும் இந்தியா அணி கூடுதல் அனுபவம், திறனுடன் உள்ளது சாதகமாகும்.
இந்திய அணி வீரர்கள்...
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கேஎல். ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், சா்துல் தாக்கூா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வா் குமார், முகமது சமி.
பாகிஸ்தான் வீரர்கள்...
பாபா் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜூனியா், சா்ப்ராஸ் அகமது, ஷாஹின் ஷா அப்ரிடி, ஷோயிப் மாலிக்.
இடம் - ஆட்ட நேரம்:
துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் நடைபெறும் துபை சா்வதேச மைதானத்தில் பிட்ச் மெதுவாகவும், தாழ்வாக பந்து எழும் தன்மை உடையது. இங்கு நடைபெற்ற 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.
வானிலை:
துபாயில் இன்று தெளிவான வானிலையும், கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிமூட்டம் காணப்படும். இது சேஸ் செய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித


