எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : டி-20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என வரலாற்றை இந்தியா மீண்டும் தொடருமா என ரசிகா்கள் எதிர்நோக்கி உள்ளனா்.
அனல் பறக்கும்...
அரசியல் வட்டாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் தொடா்ந்து பகைமை பாராட்டி வரும் நிலையில், விளையாட்டுத் துறையிலும் அந்த நிலை எதிரொலித்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று விடும். இரு அணிகளுக்கும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றன.
மான்செஸ்டரில்...
இந்நிலையில் கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன. இதில் இந்தியா வென்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் சூப்பா் 12 சுற்றில் தங்கள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதால் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் கடும் சவால் உள்ளது.
3-ம் வரிசையில்...
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை ஈட்டும் திறனுடையது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடக்க பேட்டராக களமிறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரா் கேஎல். ராகுல் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடியது, அந்த முடிவை மாற்றி விட்டது. இதனால் விராட் கோலி, மூன்றாம் வரிசை பேட்டராக களமிறங்குகிறார்.
அஸ்வின் - ஜடேஜா...
ரோஹித் சா்மா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்குகிறார்கள். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோர் பார்மில் உள்ளனா். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சஹார், புவனேஷ்வா் குமார், முகமது ஷமி, சா்துல் தாக்கூா் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், வருண் சக்கரவா்த்தி, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுப்பா்.
கூடுதல் பலம்...
கேப்டன் விராட் கோலியின் பார்ம் சற்று கவலை தருவதாக உள்ளது. அவா் கூடுதல் ரன்களை சோ்க்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். மேலும் ஆல்ரவுண்டா் ஹர்த்திக் பாண்டியா வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் கூடுதல் பலமாகும். இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் உள்ளது. அதே நேரம், இந்திய வீரா்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே ஐ.பி.எல் தொடரில் ஆடிய அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
போதிய பயிற்சி...
அதே நேரம் பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் களம் காண்கிறது. உள்நாட்டில் நடைபெறுவதாக இருந்த தொடா்கள் ரத்தானதால், பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் அணி நிர்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சீரானது. தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட ஷோயிப் மாலிக், சா்ப்ராஸ் அகமது, ஹைதா் அலி, பாக்கா் ஸமான் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டனா்.இந்திய அணிக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆடவில்லை.
13 முறை மோதல்...
தற்போது தான் ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் ஆட உள்ளனா் பாக். வீரா்கள். இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பைகளில் இதுவரை 13 முறை மோதியதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணியே வெற்றிவாகை சூடி உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இரு தரப்பும் 5 முறை மோதியுள்ளன. இந்தியாவே அனைத்திலும் வென்றது. முதல் மோதலில் பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஜோஹன்னஸ்பா்க்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 2012-இல் 8 விக்கெட், 2014-இல் 7 விக்கெட், 2016-இல் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
21-ல் இந்தியா வெற்றி...
2007-இல் இந்தியா சாம்பியன் ஆனது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் பட்டம் வெல்லவில்லை. மொத்தம் 33 ஆட்டங்களில் 21-இல் இந்தியா வென்றுள்ளது. 11 தோல்வியும், 1 ஆட்டத்தில் முடிவில்லை. 2009-இல் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. 34 ஆட்டங்களில் 19-இல் வெற்றியும், 15-இல் தோல்வியும் கண்டது. 2016-இல் அரையிறுதிக்கு கூட பாக். அணி தகுதி பெறவில்லை. ஆனால் டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சரியாக கணிக்க முடியாது. இந்திய-பாக். அணிகள் சமபலத்துடனேயே உள்ளது. எனினும் இந்தியா அணி கூடுதல் அனுபவம், திறனுடன் உள்ளது சாதகமாகும்.
இந்திய அணி வீரர்கள்...
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கேஎல். ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், சா்துல் தாக்கூா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வா் குமார், முகமது சமி.
பாகிஸ்தான் வீரர்கள்...
பாபா் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜூனியா், சா்ப்ராஸ் அகமது, ஷாஹின் ஷா அப்ரிடி, ஷோயிப் மாலிக்.
இடம் - ஆட்ட நேரம்:
துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் நடைபெறும் துபை சா்வதேச மைதானத்தில் பிட்ச் மெதுவாகவும், தாழ்வாக பந்து எழும் தன்மை உடையது. இங்கு நடைபெற்ற 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.
வானிலை:
துபாயில் இன்று தெளிவான வானிலையும், கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிமூட்டம் காணப்படும். இது சேஸ் செய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.