முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 724 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,30,516 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,30,516ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 743 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,85,946 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,529 ஆக உயர்ந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 05 பேரும், அரசு மருத்துவமனையில் 05 பேரும் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 558637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 5,47,83,973 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,02,068 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 8,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து