எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்தது. ரஷியா-குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் ரஷியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெட்வதேவ் (ரஷியா) 7-6 (9-7), 6-2 என நேர் செட் கணக்கில் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். இதன்மூலம் ரஷியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் ரஷியா 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது. இதற்கு முன்பு 2002, 2006-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
ஹேட்லி சாதனையை சமன் செய்த அஸ்வின்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதுவரை 22 தொடர் முடிந்து உள்ளது. தற்போது 23-வது தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.
ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்தார். மும்பை டெஸ்டில் அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். ரோஸ் டெய்லரை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை சமன் செய்தார்.அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. முன்னதாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கார்ல்சன் முன்னிலை
துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் அதுதான். 7-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்தார். கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான 8-வது ஆட்டம் நடைபெற்றது.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 5 புள்ளிகளும் நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிப்பதால் உலக சாம்பினாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஓய்வு நாளாகும். 9-வது ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
மும்பை டெஸ்ட் தொடர்: வைரலான 4 பேர் புகைப்படம்
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அக்ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது.
நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன் கேப்டன்கள்
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும், டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது.
நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ்-க்கு சிறப்பு பரிசு
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார். மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
ஜன. 2-வது வாரத்தில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜன. முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அகமதாபாத்தை ஏலம் எடுத்த சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு புகார் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர் 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை வாங்கிக்கொள்ள 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து ஜன.2வது வாரத்தில் வீரர்கள் பொது ஏலம் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.