எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்தது. ரஷியா-குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் ரஷியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெட்வதேவ் (ரஷியா) 7-6 (9-7), 6-2 என நேர் செட் கணக்கில் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். இதன்மூலம் ரஷியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் ரஷியா 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது. இதற்கு முன்பு 2002, 2006-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
ஹேட்லி சாதனையை சமன் செய்த அஸ்வின்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதுவரை 22 தொடர் முடிந்து உள்ளது. தற்போது 23-வது தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.
ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்தார். மும்பை டெஸ்டில் அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். ரோஸ் டெய்லரை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை சமன் செய்தார்.அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. முன்னதாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கார்ல்சன் முன்னிலை
துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் அதுதான். 7-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்தார். கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான 8-வது ஆட்டம் நடைபெற்றது.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 5 புள்ளிகளும் நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிப்பதால் உலக சாம்பினாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஓய்வு நாளாகும். 9-வது ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
மும்பை டெஸ்ட் தொடர்: வைரலான 4 பேர் புகைப்படம்
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அக்ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது.
நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன் கேப்டன்கள்
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும், டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது.
நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ்-க்கு சிறப்பு பரிசு
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார். மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
ஜன. 2-வது வாரத்தில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜன. முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அகமதாபாத்தை ஏலம் எடுத்த சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு புகார் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர் 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை வாங்கிக்கொள்ள 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து ஜன.2வது வாரத்தில் வீரர்கள் பொது ஏலம் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பில் புதிய உரத் தொழிற்சாலை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்
21 Dec 2025கவுகாத்தி, அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.



