எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 52 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 24 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது இரட்டிப்பாக மாறியுள்ளது. பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்தி செல்ல தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு 17 சதவீதம் பேர் மம்தா பானர்ஜியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய ‘இந்தியா டுடே’ நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு தகவல்கள் நேற்று காலை வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பிரதமர் மோடி தொடர்ந்து மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்வது தெரிய வந்துள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதல்வர்களின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே சமயத்தில் எதிர்க்கட்சி முதல்வர்களின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பு முழு விவரம் வருமாறு:-
1) சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் 58 சதவீதம் பேர் ஆட்சியாளர்கள் மீது திருப்தி தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் மோடி அரசு சிறப்பாக இருப்பதாக கூறி உள்ளனர். (2020-ம் ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்).
2) சட்டசபை தேர்தல் நடக்கும் உத்தரபிரதேசத்தில் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவாவில் 67 சதவீதம் பேர், மணிப்பூரில் 63 சதவீதம், உத்தரகாண்டில் 59 சதவீதம், பஞ்சாபில் 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
3) மாநில முதல்வர்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 71 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 69.9 சதவீதமும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 67.5 சதவீதமும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே 61.8 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளனர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு 61.1 சதவீதமும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 57 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
4) பா.ஜ.க. ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, பீகார் மாநிலங்களில் அந்த மாநில முதல்வர்களுக்கு 35 முதல் 40 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. கோவா பா.ஜ.க. முதல்வர் பிரமோத்துக்கு 27 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
5) மாநில முதல்வர்களை ஆதரிக்கும் விஷயத்தில் மக்கள் மனநிலையில் மாற்றங்கள் இருந்தாலும் தேசிய அளவில் பிரதமர் மோடி அதிக செல்வாக்குடன் முதல் இடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதாவுக்கு 296 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. (இது 2019 தேர்தலில் பா.ஜ.க. பெற்ற 352 இடங்களில் 56 இடங்கள் குறைவாகும்). அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
6) மோடிக்கு ஆதரவு இருந்தாலும் மக்கள் சில விஷயங்களில் கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டதாக 25 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருப்பதாக 13.6 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
7) விவசாயிகள் பிரச்சினை சரியானபடி கையாளப்படவில்லை என்று 10 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதுபோல கொரோனா நோய் எதிர்கொள்ளும் விஷயத்திலும் 7 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
8) நாட்டு மக்களில் 64 சதவீதம் பேர் தங்களது பொருளாதார நிலை சரியாக இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். பெரிய தொழில் அதிபர்கள் மோடி ஆட்சியில் லாபம் அடைந்திருப்பதாக 47.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
9) பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட அடுத்த தகுதியான நபர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு 52.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு நாடு முழுவதும் 24 சதவீதம் பேர் ஆதரவுதான் இருந்தது. அது இரட்டிப்பாக மாறி இருக்கிறது.
10) காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு தற்போதைய கருத்துக்கணிப்பில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.
11) பிரதமர் பதவிக்கு பிரியங்கா பொருத்தமானவர் என்று வெறும் 3.3 சதவீதம் பேர்தான் கருத்து தெரிவித்துள்ளனர். மம்தாவுக்கு 2.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
12) பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்தி செல்ல தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு 17 சதவீதம் பேர் மம்தா பானர்ஜியை சுட்டிக்காட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 16 சதவீதமும், ராகுல் காந்திக்கு 11 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. சோனியா, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கு குறைந்த அளவு ஆதரவே கிடைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
மும்பை நகரை பம்பாய் என்று அழைப்பதா? - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
12 Sep 2025மும்பை : மும்பை நகரை பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
12 Sep 2025சென்னை : நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
-
மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சலுகைகள் ரத்து எதிரொலி: அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச
12 Sep 2025கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வ
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.